Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 243 - சனி மகாதிசை,புதன் புத்திப் பலன்கள்


தானென்ற காரிதிசை புதன்புத்திகேளு
தன்மையுள்ள மாதமது நாலெட்டாகும்
நானென்ற நாளதுவும் ஒன்பதாகும்
நன்றாக அதில் பலனை நவிலக்கேளு
மானென்ற மன்னரால் மகிழ்ச்சியுண்டாம்
மாதர்முதல் பந்துக்களும் மகிழ்ச்சியுண்டாம்
வானென்ற ஞானமுடன் யோகமார்க்கம்
வளர்கின்ற கற்பமுதல் தேகசத்தியாமே


காரியென்னும் சனி திசையில் புதபகவானின் பொசிப்புக்காலம் 2 வருடம் 8 மாதங்களும் 9 நாள்களுமாகும். அதன் பலனை விரிவாகச் சொல்வேன். கேட்பாயாக! அரசர் முதலோராலும் மற்றும் தாய், இன ஜன பந்துக்களாலும் மகிழ்வே உண்டாகும். ஞான மார்க்கமும், யோகமார்க்கமும் தேக சித்தியும் (நல்லுடல் வாய்ப்பும்) கருவளரும் காலம் தொட்டே உளவாகும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சனி மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment