Sunday 16 December 2012

வீட்ல விநாயகர் இருந்தா விசேஷங்க!

சுதா ரகுநாதன் வீட்டு அழைப்பு மணி அருகே ஒரு பிள்ளையார் அமைதியா கப் புன்னகைக்கிறார். கதவு திறந்ததும் வரவேற்பதும் ஒரு பிள்ளையாரே. வரவேற்பறையில் ஆனந்த சயனத்தில் ஒரு பிள்ளையார் கனிவாக நம்மைப் பார்க்கிறார். மாடிப் படிக்கட்டுகளில் வண்ணங்களில் ஜொலிக்கும் பிள்ளையார், உணவு மேஜையில் குடையோடு வீற்றிருக்கும் பிள்ளையார் என வீடு முழுக்கத் தரிசனம் தருகிறார்கள் பிள்ளையார்கள்!
''சங்கீதத்துக்கு இணையா என்னை இயக்கும் இன்னோர் அம்சம்... விநாயகர். கணபதி, கண நாயகா, கணபதி மகராசா, விக்னேஸ்வரானு எப்படி அழைச்சாலும் ஏற்றுக்கொள்ளும் விநாயகனை வணங்கினால் சங்கடங்கள் தானாக விலகும்.

சவால்கள் சாதனையாக மாறும். அதான் தீபாவ ளிக்கு அடுத்து இந்தியா முழுக்க உற்சாகமாகக் கொண்டாடும் பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி இருக்கு!'' - நெகிழ்வுடன் விநாயகர் பிரியம் பகிர்ந்துகொள்ளும் சுதா ரகுநாதன் வீட்டில் சுமார் 600 பிள்ளையார்கள் குடியிருக்கிறார்கள். ''எனக்குக் கல்யாணம் ஆன புதுசுல விருந்துக்காக பிரேமா அண்ணி வீட்டுக்குப் போயிருந்தேன். அவங்க வீடு முழுக்க விநாயகர் சிலைகள்.

அந்தச் சிலைகளையே நான் பிரமிப்பாப் பார்த்துட்டு இருக்கிறதைப் பார்த்த அண்ணி, எனக்கு ஒரு சந்தனப் பிள்ளையாரைப் பரிசாக் கொடுத்தாங்க. அதுதான் என்கிட்ட வந்த முதல் பிள்ளையார். தொடர்ந்து நண்பர்கள், உறவினர்கள் பரிசாக் கொடுத்த வகையில் ஒரே வருஷத்துல 50 விநாயகர்கள் என் வீட்டுக்கு வந்தாங்க. 'விநாயகரே நம்ம வீட்டுக்கு விரும்பி வர்றார். அவரை உன் இஷ்ட தெய்வம் ஆக்கிக்கோ’னு அப்பதான் என் மனசுல பதிஞ்சது.

அப்புறம் எங்கே போனாலும் பிள்ளையார் சிலை வாங்காம இருக்க மாட்டேன். வெள்ளி, தங்கம், சந்தனம், லேப்பிஸ், கிறிஸ்டல், சோப்னு பல பொருட்களில் செய்யப்பட்ட பிள்ளையார்கள், சிவன் வடிவ விநாயகர், வீணை ஏந்திய விநாயகர், புத்தர் போன்ற விநாயகர்னு விதவிதமா சேகரிக்க ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட 28 வருடச் சேகரிப்பு இந்தப் பிள்ளையார்கள்!
எப்பவும் நான் விநாயகரை தெய்வம் என்ற அம்சத்தில் மட்டுமே அணுகுவேன். கிரிக்கெட் பிள்ளையார், கம்ப்யூட்டர் பிள்ளையார், சார்லி சாப்ளின் பிள்ளை யார்னு மார்க்கெட்ல ஃபேன்ஸியா இருக்கும் பிள்ளையார்களை வாங்க மாட்டேன். என் மகன், மகள்... ரெண்டு பேருமே 20 வயசைத் தாண்டிட்டாங்க. ஆனா, இப்பவும் வீட்ல ஏதோ ஒரு குழந்தை தவழ்ந்துட்டு இருக்கும் உணர்வைக் கொடுக்கிறாங்க என் பிள்ளையார்கள்.

வீட்டுக்கு புதுப் பிள்ளையார் வர்றப்போ, 'புதுப் பாப்பா வந்துடுச்சு’னு மகனுக்கும் மகளுக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புவேன். உடனே அவங்களும் 'என்ன ஸ்பெஷல்? எப்படி இருக்கார்?’னு ஆர்வமாக் கேட்பாங்க.
என் மனசுக்கு ரொம்பப் பிடிச்ச பிள்ளையார்னா, தம்புரா வாசிக்கும் பிள்ளையார். இவர் எப்பவும் நிதர்சன சந்தோஷத்துல இருப்பார். கச்சேரி மேடையில் நான் வாசிக்க உக்காந்துட்டா, யார் கைதட்டுறாங்க, யார் எந்திரிச்சுப் போறாங்கன்னுலாம் பார்க்க மாட்டேன்.

ஒருவிதமான மோனத்தவத்துல ஆழ்ந்துதான் பாடுவேன். அந்த உணர்வு தம்புரா பிள்ளையார்கிட்ட இருந்து எனக்கு வந்திருக்கும்கிறது என் நம்பிக்கை!
எப்பவும் விநாயகர் பாட்டுப் பாடித்தான் நான் கச்சேரியை ஆரம்பிப்பேன். இது என் குரு எம்.எல். வசந்தகுமாரி கத்துக்கொடுத்த பழக்கம். ஆனா, இத்தனை பிள்ளையார்களும் நிறைவேத்தாத ஏக்கம் ஒண்ணு இருக்கு எனக்கு. அது, என் கனவுல ஒரு தடவைகூட பிள்ளையார் வந்ததே இல்லைங்கிறது. சீக்கிரமே அவர் என் கனவுல வரணும்னு அடிக்கடி உருகி உருகிப் பாடுவேன்'' என்று தம்புராவை மீட்டியபடி திவ்யமான குரலில் பாடத் தொடங்குகிறார் சுதா ரகுநாதன்.

''பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவைநாலும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே
நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா...
ஸ்ரீகணேசா... சரணம்!

Monday 10 December 2012

திருமணத்திற்கு பின் வரும் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்.

 
திருமணத்திற்கு பின் வரும் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்.

விதிக்கப்பட்டதை அனுபவிப்பதேயன்றி வேறுஒன்றும் செய்வதற்கில்லை. அப்படியானால் நம்முடைய முயற்சி, வேண்டுதல்கள், தியாகம் இவற்றிற்கெல்லாம் என்ன பயன்?
பரிகாரங்கள் என்ற ஒன்று இல்லவே இல்லையா? என்றால்,  இதற்கெல்லாம் பதில் விதியை அனுபவிப்பது தான். ஆனால் நம் விருப்பப்படி அனுபவிப்பது. அது எப்படி?

அனைவருடைய திருமண வாழ்க்கையிலும் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். பிரச்சனைகள் இல்லாத் வாழ்க்கை இல்லவே இல்லை. காரணம் தனிமனிதனாக இருக்கும் போது நாம் ஒருவர் மட்டும்தான். நம்முடைய பிரச்சனைக்குரிய தீர்வு நாம் மட்டும் எடுப்பதே ஆகும். அதே சமயம், திருமணத்திற்குப்பின் தன்னுடைய மனைவி அல்லது கணவன் குழந்தைகள் இவர்களின் மனநிலையையும் அவர்களின் தேவைகளும் சேர்ந்து கொள்கிறது. நம்முடைய தீர்வு நம் குடும்பத்தாருடன் ஒத்துப் போவதில்லை அது தான் பிரச்சனை.

இதற்கு தீர்வு விட்டுக்கொடுத்தல், தியாகம், இவையெல்லாம் தான். இதற்கு உளவியல் தீர்வு போதுமே எதற்கு ஜோதிடம் என்று கேட்போரும் உண்டு. வெறும் உளவியல் முறையில் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. ஜோதிடத்தில் திருமணப் பொருத்தம் பார்ப்பதும் அதற்காகத்தான். நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே திருமணப் பொருத்தம் ஆகாது. முழுஜாதகத்தையும் பொருத்தி பார்க்க வேண்டும்.

திருமணம் நடந்தபின்பு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல்வதற்கு முன். பிரச்சனைகள் என்ன என்பதை ஆராயலாம். பிரச்சனைகளை நாம் நான்காக வகைப்படுத்தலாம்.

  1. அறம் சாரந்த பிரச்சனைகள்
  2. பொருள் சார்ந்த பிரச்சனைகள்
  3. இன்பம் சார்ந்த பிரச்சனைகள்
  4. மோட்சம் சார்ந்த பிரச்சனைகள்

அறம் சார்நத பிரச்சனைகள்.
அறம் என்பது என்ன? மனம், கல்வி, புத்திசாலித்தனம், முடிவுஎடுக்கும் திறன். நியாயம் தரமம் இது போன்றவை. அதாவது நாம் எடுக்கும் முடிவு குடும்பத்திற்கு ஒத்துப் போகாமல் வரும் பிரச்சனைகள்.

பொருள் சார்ந்த பிரச்சனைகள்
பணம், வீடு, வாகனம், தொழில் இது போன்ற பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள்.

இன்பம் சார்நத பிரச்சனைகள்
காதல், காமம், ஆடம்பரம், இலாபம் இது போன்ற உடல் சார்ந்த மனமும், மனம் சாரந்த உடலினாலும் ஏற்படும் பிரச்சனைகள்.

மோட்சம் சார்ந்த பிரச்சனைகள்
இறப்பு, மறுபிறப்பு, தொடர்பான பிரச்சனைகள். சாதாரண மனித வாழ்க்கையில் இது இடம் பெற வாய்ப்பில்லை. காரணம் யாரும் இறந்தபின்பு சொர்க்கமா நரகமா, மோட்சமா? மறுபிறப்பா என்பதற்கு மட்டும் சண்டை போட்டுக்கொள்ள மாட்டார்கள்.

உண்மையில் பிரச்சனைகள் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் அதற்கான தீர்வைக் காண முடியும். மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? மனித வாழ்க்கையின் செயல்பாடுகள், தேவைகள் இவற்றை ஜோதிடத்தில் 12 பாவங்களாகப் பிரித்து பலன் காண்கிறோம். மேற்கூறிய பிரிவுகளும் ஜோதிடப் பாவங்களும் அதாவது ஸ்தானங்களும் என்ன என்றால்?

அறம் சாரந்த ஸ்தானங்கள் – 1, 5, 9
பொருள் சார்ந்த ஸ்தானங்கள் – 2, 6, 10
இன்பம் சார்ந்த ஸ்தானங்கள் – 3, 7, 11
மோட்சம் சாரந்த ஸ்தானங்கள் – 4, 8, 12


பிரச்சனைகள் எப்பொழுது வரும் என்று தெரிந்தால் தான். அதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்ய ஏதுவாக இருக்கும். ஜோதிடம் என்பது எதிர்கால வாழ்க்கைக்கான வழிகாட்டி. எந்த காலகட்டங்களில் நாம் எவ்வாறு நடந்துகொள்ளப் போகிறோம் அல்லது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கூறுவது தான் ஜோதிடம். அந்த காலகட்டங்களை ஜோதிடத்தில் திசா புத்தி அந்தரம், என்ற ஜோதிடக் கணிதத்தில் தெரிந்து கொள்ள முடியும்.

கணவனுக்கும் மனைவிக்கும் தனித்தனியாக நடக்கும் திசாபுத்தி அந்தர அதிபதிகளின் சேர்க்கை சுபமானால் பிரச்சனைகளுக்குரிய தீர்வு கிடைத்துவிடும். இல்லையென்றால் சிறு விவாதம் கூட பெரிய பிரச்சனையாகி பிரிவு என்ற நிலைவரை வந்து விடும்.

சில சமயம் என்ன பிரச்சனை எதற்காக கோபப்படுகிறார்கள் என்பதே தெரியாத நிலையில் எந்த தசாபுத்தி அந்தரம் நடக்கிறதோ அதன் காரகத்துவங்களில் தான் கோபம் வரும் உதாரணமாக 3, 7, 11ம் சூட்சும அந்தர காலங்களில் காதல், காமம்,அந்நியோன்யம்,  திருப்பியின்மையினாலும் கோபம் வரும் அதைப் புரியாமல் நீங்கள் கோயில் கோயிலாக சுற்றினால் உங்கள் மேலும் கடவுள் மேலும் கோபம் தான் வரும் அப்பொழுது செய்ய வேண்டியது இருவரும் தனியாக சென்று இயற்கையை அனுபவியுங்கள்.

அறம் சார்நத காலகட்டங்களுக்கு தீர்த்த யாத்திரை போவதும், பொருள் சாரந்த காலகட்டங்களில் பொருளாதார சக்திக்கு தகுந்தவாறு சிறு பொருளாவது பரிசாகக் கொடுப்பதும் சிறந்தது.

இவ்வாறு செய்தால் குடும்பத்தில் பிரச்சனை வராதா என்றால் வரும் ஆனால் மறுநாள் அது தீரந்துவிடும். பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும். பிரச்சனை பிரிவு வரைசெல்லாது.

இது தான் ஜோதிடம் கூறும் தீர்வு. ஒவ்வொரு பிரச்சனைகளையும் இவ்வாறு புரிந்து காலகட்டங்களை உணர்ந்து செயல்பட்டால் எல்லா நாளும் திருப்தியாகவே அமையும்.

Sunday 11 November 2012

ஜோதிட பழமொழிகள்

  • பத்தில் குரு பதவிக்கு இடர்
  • இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே
  • பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும்
  • நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை
  • சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது.
  • வைத்தியன் கையை பிடிப்பான் ஜோதிடன் காலை பிடிப்பான்
  • கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்
  • ராசி இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க
  • குரு பார்க்க கோடி நன்மை
  • கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும்
  • மகத்துப் பெண் – பூரத்துப் புருஷன்
  • பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது,
  • மேஷ ராகு மேன்மையை கொடுக்கும்
  • துலா கேது தொல்லை தீர்க்கும்
  • சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்
  • சுவாதி சுக்ரன் ஓயா மழை
  • மறைந்த புதன் நிறைந்த கல்வி
  • சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்
  • சித்திரை அப்பன் தெருவிலே
  • பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும்
  • விதி போகும் வழியே மதி போகும்.
  • அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம்
  • குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?
  • சனி பார்த்த இடம் பாழ்
  • சனி நீராடு
  • விழுப்பு இருக்குமிடத்தில் வேப்பிலைக்காரி தங்க மாட்டாள்.
  • ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு
  • பருப்புக்கு போகாவிட்டாலும் நெருப்புக்கு போக வேண்டும்
  • எட்டில் சனி நீண்ட ஆயுள்
  • சனிபகவானைப் போன்று கெடுப்பாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை
  • அகப்பட்டவனுக்கு அஷ்டத்தில் சனி
  • குரு நின்ற இடம் பாழ்
  • சனி பார்க்கும் இடம் பாழ்

Saturday 22 September 2012

வறுமையை நீக்கி செல்வ வளம் தரும் சித்தர் மந்திரம்

 




உங்கள் பணக் கஷ்டம் தீர வேண்டுமா?
நீங்கள் நிம்மதியாக வாழவேண்டுமா
?

கீழ் காணும் சித்தர் துதியினை தினமும் 9இன் மடங்குகள் வீதம் இருமுறை என குறைந்தது 1 வருடம் வரை உங்கள் வீட்டு பூஜாஅறையில் ஜபித்து வரவும்.
நிச்சயம் பலன் கிடைக்கும்.

ஓம் அகத்தீசாய நமக
ஓம் நந்தீசாய நமக
ஓம் திருமூல தேவாய நமக
ஓம் கருவூர் தேவாய நமக
ஓம் ராமலிங்க தேவாய நமக

Thursday 20 September 2012

தோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்

அடுத்த முறை, நீங்கள் எப்போது கும்ப கோணம் சென்றாலும், இந்த கட்டுரையிலும் அடுத்து வரும் மூன்று கட்டுரைகளிலும் உள்ள - மிக முக்கியமான , கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஸ்தலங்களை தரிசித்து வாருங்கள். ரத்தினச் சுருக்கமாக , இந்த ஆலயங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் முக்கிய பலன்களை கொடுத்துள்ளேன்.

பல வருடங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று , அங்கேயே குடியுரிமை பெற்று தங்கிவிட்ட எனக்கு மிகவும் வேண்டப்பட்ட நண்பர் ஒருவர், கும்பகோணத்திற்கு செல்ல விருப்பப் பட்டதால், சில நாட்களுக்கு முன்பு சென்று வந்தோம். அங்கு இருந்தபடியே , இணைய தளத்தில் அவர் திரட்டி இருந்த தகவல்களின் மின்னஞ்சலை எனக்கு அனுப்பி இருந்தார். நம் வாசகர்களுக்கும் அது பயன் தரும் என்பதால் , அவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

சில ஆலயங்களைப் பற்றி அந்த வரிகளை படிக்கும்போதே , உங்கள் உள்ளுணர்வு அந்த கோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லும். அந்த ஆலயத்திற்கு அவசியம் சென்று வாருங்கள். உங்கள் பூர்வ ஜென்ம , கர்ம வினைகள் நிச்சயம் அகலும்.

எல்லா ஆலயங்களுக்கும் செல்ல முடியவில்லை என்றாலும், கலக்கம் வேண்டாம். அதே நேரத்தில் , உங்களால் மிகத் திருப்தியாக பூஜை , அபிசேகம், அலங்காரம் செய்ய முடியவில்லையே என்று கூட மனக்கலக்கம் வேண்டாம். ஐயா , ஒரு அர்ச்சனை கூட செய்ய வேண்டாம்.. ஒரே ஒரு விஷயம் மட்டும் தவறாமல் செய்யுங்கள்...

மூலவருக்கு முன்பாக, அவரைப் பார்த்தபடியோ , அல்லது உங்களால் முடிந்தவரை அருகிலோ - அல்லது மற்றவருக்கும் தொந்தரவு இல்லா வண்ணம் - ஒரு மணி நேரம் வரை வெறுமனே அமர்ந்து , மனத்தால் இறைவனிடம் உங்கள் குறைகளை தீர்க்க வேண்டி மன்றாடுங்கள். முடிந்தால் மனதுக்குள் - ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் ஜெபிக்கலாம், அல்லது காயத்ரி மந்திரம் ஜெபிக்கலாம். ஸ்ரீ ருத்ரம் ஜெபிக்கலாம்.

சில சமயங்களில் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை இருந்தால் , குறைந்த பட்சம் 12 நிமிடங்களாவது , அமர்ந்து வாருங்கள். இறைவனின் சிருஷ்டியில் எல்லா நாளும், நேரமும் புனிதமானதே. ஒரு சில மணித்துளிகள் மட்டும் , பலப்பல காரணங்களால் - மிக சக்திவாய்ந்த தருணங்கள் ஆகி விடுகின்றன.

இதில் இன்னொரு சூட்சுமம் உள்ளது. உங்களுக்கு நடக்கும் தசை / புக்தி என்னவென்று பாருங்கள். அதற்கேற்ப உகந்த நேரத்தில் - நீங்கள் அந்த தெய்வத்தின் முன் நிற்க, உங்களுக்கு ஏற்படும் தடைகள் அனைத்தும் , படிக்கற்கள் ஆகிவிடும். ஹோரைகள் பற்றி , நவ கிரகங்களுக்கு உரிய தேவதைகள் பற்றிய நமது முந்தைய கட்டுரையை , ஒரு முறை சரி பார்த்து , அதன்படி நடக்கவும்...

நல்ல விஷயங்களை , நீங்கள் அறிந்து உணந்த விஷயங்களை - உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்திலும், உங்கள் குழந்தைகளுக்கும் தக்க நேரத்தில் எடுத்து சொல்லுங்கள். லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் வெளிநாட்டு அன்பர்களும் , இந்தியாவை , குறிப்பாக தமிழகத்தை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக நினைப்பது , நம் ஊர் ஆலயங்களுக்காகத்தான். இங்கேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்த அனைவரும், அதை பயன்படுத்திக் கொள்வது நல்லதுதானே..!

மன நோய் அகற்றும் " திருவிடை மருதூர் "
 
சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர் " மகாலிங்கமானார்". இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத் தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக் கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத் தலம்.

புற்றுநோய் தீர்க்கும் " திருந்துதேவன் குடி அருமருந்தம்மை "

புற்று நோய்தீர்க்கும் தலம் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில்.
கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் " திருந்துதேவன்குடியின் " நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை. இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.



கடன் தொல்லைகள் தீர்க்கும் " திருச்சேறை ருண விமோச்சனர் "

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில் அமைந்துள்ளது " திருச்சேறை உடையார் கோவில் ". இங்கு தனி சந்நதியில் " ருண விமோச்சனராய் " அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச் சந்நதியின் முன் நின்று " கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே " என மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்

சங்கடங்கள் தீர்க்கும் திருபுவனம் " சூலினி, பிரத்தியங்கரா சமேத சரபேஸ்வரர் "
கடன் தொல்லைகளில் இருந்து விடுபட, வழக்குகளில் வெற்றியடைய, பில்லி, சூனியம், ஏவல்களில் இருந்து விடுபட பரமேஸ்வரன், சரபேஸ்வரராய் வீற்றிருந்து அருள்பாளிக்கும் " திருபுவனம் " சென்று வழிபடலாம். இவர் வழிபடுபவரின் அனைத்து சங்கடங்களையும் தீர்ப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என தன் இரு தேவியருடன் தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபரை 11 விளக்குகள் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, 11 வாரங்கள் வழிபட சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து சுக வாழ்வு கிடைக்கும். சரபரை வழிபட ஞாயிற்று கிழமை ராகு கால வேளை சிறந்தது.

பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர , வணங்க வேண்டிய "ஸ்ரீவாஞ்சியம்"
காசிக்கு இணையான தலம் இந்த ஸ்ரீவாஞ்சியம். காசியில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால், இத் தலத்திலோ புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே சிலையில் காட்சி தரும் இத் தலத்தில் உள்ள குப்த கங்கையில் நீராடி வாஞ்சிநாதரையும், மங்களநாயகியையும், மஹாலஷ்மியையும் வழிபட்டால், பிரிந்திருக்கும் தம்பதியர், பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர். கால சர்ப்ப தோஷம் நீக்கும், பாவங்கள் தீர்த்து முக்தி அருளும் இது சனி தோஷ பரிகாரத்திற்கு சிறந்த திருத்தலம்.

அட்சரப்பிரயாசம் ( எழுத்தறிவு ) பெற இன்னம்பூர் எழுத்தறிநாதர்
அகத்திய முனிவர் இத் தலம் வந்து எழுத்தறிநாதரை வழிபட்டு இலக்கணங்களை கற்றுக் கொண்டதால், இன்றளவும் இத் தலத்தில் சிறு பிள்ளைகளுக்கான அட்சரப்பியாசம் நடைபெறுகிறது. குழந்தைகளை பெற்றவர் இத் தலம் அழைத்து வந்து இங்குள்ள நாதனின் முன்பாக எழுத்து பயிற்சி தருகின்றனர்.இத் தல நடராஜரின் விக்கிரகத்தில் இடப் பக்கம் கங்கா தேவியும் வலப் பக்கம் நாகமும் காட்சியளிப்பது அற்புதமான காட்சி. இத் தலம் சஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி ஹோமங்கள் செய்ய மிகச் சிறந்தது.

தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் " திருநல்லம் "
முக்கண்ணன் " உமா மகேஸ்வரராய் " மேற்கு நோக்கி வீற்றிருக்க, " அங்கவள நாயகியாய் "அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த, திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். " பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் "என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், " ஸ்ரீ வைத்திய நாதர் " சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம், திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில், கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.

தீரா நோய்கள் தீர்க்கும் "வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர் "
மயிலாடுதுறை - சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத் தலம் " வைத்தீஸ்வரன் கோவில் ". செவ்வாய் தோஷம் நீக்கும் " அங்காரகனுக்குரிய " திரு கோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர், தையல் நாயகி சமேதராய் அருளும் திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமி தீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார். 18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் "தன்வந்திரி" இத் தலத்திற்கு உரியவர். அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையை உட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராத வியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயுகுண்டத்தில் உள்ள சாம்பலை பூசிக்கொள்ள நோய்கள் தீருகின்றன.

செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை"

கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

சரஸ்வதி கடாட்சம் தரும் கூத்தனூர்

மாணவர்கள் கல்விச் செல்வம் பெறவும், கலைமகளின் பரிபூரண அருளை பெறவும் வழிபட வேண்டிய தலம் ஞானசரஸ்வதி காட்சி தரும் "கூத்தனூர்". நமது பிறப்புகள் அனைத்திலும் நம்முடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வம் மட்டுமே. மயிலாடுதுறை - திருவாரூர் வழித் தடத்தில் பேரளத்தை அடுத்து அமைந்துள்ளது ஞான சக்தியாய் மகா சரஸ்வதி அருளும் கூத்தனூர். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி ஆய கலைகள் அனைத்தையும் அருள்பவள். இவள் வாக்கு வன்மையை தருபவள். வாழ்வில் உயர அனைவரும் வழிபட வேண்டியவள். ஞானம் அருள்பவள்.



நாக,புத்திர,மாங்கல்ய தோஷங்கள் நீங்க நாச்சியார் கோவில் கல் கருடன்

காரியங்கள், திருமணம் கைகூட திருநந்திபுர விண்ணகரம் நாதன் கோவில்

கடும் வியாதிகளின் இருந்து விடுபட கும்பகோணம் பாணபுரீஸ்வரர்

கடும் ஜூரம் விலகிட காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில் "ஜூரகேஸ்வரர் "

பிரிந்த தம்பதியர் ஒன்று சேர கும்பகோணம் ஆதி வராகப் பெருமாள்

ராகு தோஷம், எம, மரண பயம் நீங்க திருநீலக்குடி எனும் தென்னலக்குடி

மாங்கல்ய பலம் பெற, நோய்கள் தீர திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்

குழந்தைகளின் நோய் தோஷங்கள் தீர சிவபுரம் எனப்படும் திருச்சிவபுரம்

விஷக் கடியில் இருந்து நிவாரணம் பெற அழகாபுத்தூர் சங்கு சக்கிர முருகன்
=============================================================