Saturday 11 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 230 - இராகு மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள்


ஆகுமே ராகுதிசை சூரியபுத்தி
அருளில்லா மாதமது பத்தேயாகும்
யேகுமே நாளதுவும் மூவெட்டாகும்
யென்ன சொல்வேனதன் பலனை யியம்பக்கேளு
போகுமே சத்துருவால் வியாதிகாணும்
பொருள் சிலவு பூமிமுதல் சேதமாகும்
சாகுமே நாள்தோறும் சண்டையாலே
சதிரான பூமிமுதல் காலிபோமே.


இவ்விராகு திசையில் சூரிய பகவானின் பொசிப்புக் காலம் கருணை தராத காலமே. இக்காலம் 10 மாதம் 24 நாள்களாகும். தீய சத்துரு ஏற்படுதலும், உடல் நலத்தைக் கெடுக்கும் வியாதி நேர்தலும் அதனால் பெரும் பொருள் செலவும் பூமி முதலிய விரயமுமாகும். ஒவ்வொரு நாளும் சண்டையிடுதலாலே சாவு நேர்தலும் பெருமை மிக்க பூமி அழிதலும் கன்று காலிகள் மாய்தலும் நேரும் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் இராகு மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment