Friday 10 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 205 - சூரிய மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள்


கேளப்பா ரவி திசையில் சுக்கிரபுத்தி
கெணிதமுள்ள மாதமது பனிரெண்டாகும்
ஆளப்பா அதன்பலனை அரையக்கேளு
ஆகாத சூரியனுடன் சூஸ்திரவாய்வு
பாளப்பா ஆக்குமடா திரேகந்தன்னை
பகையதுவுண்டாகும் பலனோயில்லை
வாளப்பா மனையாட்டி சிலுக்குண்டாகும்
வகையுடனே வான் பொருளும்கேடாம் சொல்லே


மேலுமொன்று இந்த இரவியின் திசையில் சுக்கிரபுத்தி 1 வருட காலமாகும். இச்சுக்கிர பகவானின் பொசிப்புக் காலத்தில் ஏற்படும் பலன்களாவன: சுக்கிரனது பகைவன் சூரியனாதலால் சூத்திர மிக்க வாய்வு உபாதை ஏற்பட்டு திரேக நலத்தைக் கெடுக்கும். பகைமைகளை உண்டாக்கும். நற்பலன்கள் வாய்த்தல் ஏற்படாது. மனைவிக்குப் பலவித அரிஷ்டங்களை உண்டாக்கும். திரண்ட பொருட் சேதம் எற்படும். நற்பலன்கள் விளையாது என்று கூறுவாயாக எனப் போகரின் அருளாணையால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் சூரிய மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment