Friday 10 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 201 - சூரிய மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்


நில்லென்ற ரவிதிசையில் வியாழன்புத்தி
நேர்மையுள்ள நாளதுவும் யெரனூத்தி யெண்பத்தெட்டு
வில்லென்ற அதன் பலனை விரித்துச் சொல்வோம்
விவரமாய் சம்பத்தும் தனதானியமுண்டாம்
சொல்லொன்றும் தவறாது வினையகலும்பாரு
சொல்லப்பா நாள்யின்ப மெய்து வாழலாகும்.
புல்லென்று புத்திரனும் ஆகும்பாரு
பொல்லாத சத்துருவும் வணங்குந்தானே.


மேலும் இந்த இரவி திசையில் வியாழ பகவானின் பொசிப்புக் காலம் 288 நாள்களாகும். நன்மை தரும் இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களாவன; விவரமுடன் நன்மைதரத் தக்க சம்பத்து ஏற்படின் சில சிறு சுபவிரங்களும் ஏற்பட்டு தனஹானியுண்டாகும். என்சொல் என்றும் தவறாது, தீவினைகள் அகலும். மிகவும் குறைவற்ற இன்பம் ஏற்பட்டு சுக செளக்யத்துடன் வாழும் நிலை ஏற்படும். இதுவரை ஏற்பட்டிருந்த சத்துருக்களும் இச்சாதகனை வணங்கி மித்துருவாகிச் சுகிப்பன் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சூரிய மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment