Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 181


உடலுயிர்க்கு மூன்றாமிடத் ததிபன் மந்தன்
உடன்கூடி யொருராசி நின்றாராகில்
திடமுடனே யவர் திசைகள் பொசுப்பில் நஞ்சு
தின்றத னாலி வனுயிர்க்குச் சேதமாகும்
படமுடைய ராகுடனே யிவர்கள்கூடிற்
பாசத்தாலிவனுயிரை மாய்த்துக்கொள்வான்.
அடவுடனே போகருட கடாட்சத்தாலே
அரியநூல் புலிபாணி அரைந்திட்டேனே.


மேலும் ஒரு கருத்தைச் சொல்லுகிறேன் கேட்பாயாக! உடலுக்கு அதிபதியாகிய சந்திரனும், உயிருக்கு அதிபதி யாகிய இலக்கினாதிபதியும் ஆகிய இவர்களுக்கு மூன்றாம் இடத்ததிபதி யாரோ அவனும், சனிபகவானும், உடன்கூடி ஒரே ராசியில் நிற்பாரேயாகில் பலமுடைய அவர்களது திசாபுத்திகள் நடைபெறும்போது நஞ்சு தின்று அதனால் அச்சாதகன் உயிர் சேதமாகும். மற்றும் படவரவான பாம்பு இராகுவுடனே ஈன கிரகங்கள் கூடினால் இவன் சுருக்கு மாட்டித் தற்கொலை செய்து கொள்வான். இதனையும் குறிப்பாக வினயமுடன் போகரது கருணாகடாட்சத்தால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment