Monday 6 August 2012

C யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்? (முழு கணிப்பு)


C என்ற ஆங்கில எழுத்தைத் தங்கள் பெயரின் முதலெழுத்தாகக் கொண்டவர்கள் சீரும், சிறப்பும், பக்தியும் கொண்டு விளங்குவர். சூரியக்கதிர்கள் இவ்வெழுத்தில் பட்டு கிரகித்து பெயரின் மற்ற எழுத்துகளுக்கும் சக்தியைத் தருவதால் எங்கும் பிரபலமாக ஜொலிப்பர்.
இவ்வெழுத்து முதலெழுத்தானால் பலம் அதிகம். ஆண்மைத்தனம், சுறுசுறுப்பு , படபடப்பு இவற்றை குறிக்கும் எழுத்து. இவ்வெழுத்தை பெயரின் முதலெழுத்தாகக் கொண்டவர்கள் கலையார்வம் மிக்கவர்கள், கலைகளால் புகழடைவார்கள். மூளையினால் உழைப்பதையே விரும்புவாரகள்.

இந்தக் கில்லாடிகள் செய்யும் அல்லது செய்யப் போகும் காரியங்கள் இவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். பார்வைக்கு அசடாகத் தெரியும் இவர்களின் மனவலிமையை, யாராலும் எடைபோட இயலாது. எதிலும் தீர்க்கமான முடிவு எடுப்பார்கள். இவர்கள் சொல்வது அப்படியே நடக்கும்.
தன்னலத்தை விட நாட்டின் நலமே இவர்களுக்குப் பெரிது. எப்பொழுதும். எதையாவது சிந்தித்துக் கொண்டேயிருப்பர். இவர்களின் மகோன்னதமான கட்டளைகளுக்காக நாடே காத்துக்கொண்டிருக்கும் அளவிற்கு செயற்கரிய காரியங்களைச் செய்வர்.

இவர்கள் நீதியின் மறுவடிவம். ஆய்வுப் பணிகள் இவர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. நீதித்துறையிலும், ஆராய்ச்சிப் பணியிலும், அரசுப் பணியிலும் ஆன்மீகத்திலும் முத்திரை பதிப்பர். மக்களுக்காக அதிக நேரம் ஒதுக்கும் இவர்கள் குடும்பத்தாருக்கும் நேரம் ஒதுக்குவது நல்லது. தினமும் வீட்டுக்குச் செல்ல நேரமில்லாமலோ, சென்றாலும் குடும்பத்தை யாராவது பார்த்துக் கொள்வார்கள் என்ற குருட்டு நம்பிக்கையிலோ இருப்பார்கள்.
மூளைபலம் மிகுந்த இவர்கள் நேர்மையாளராக இருப்பதால் மக்களுக்கு இவர்களை அதிகம் பிடிக்கும். கணினித்துறையில் வல்லவர்கள். எப்படி வியூகம் அமைத்தால், யாரை எளிதில் கவிழ்க்கலாம் என்று திட்டமிடுவதில் சமர்த்தர்கள்.

பண விஷயத்தில் சிக்கனமான இவர்கள் பிறரிடம் பணத்தை எதிர்ப்பார்ப்பதில்லை. தனது பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்வதில் வல்லவர். நியாயமான கோபம் அடிக்கடி ஏற்படும். சொந்த வேலைகளை யாரிடமும் சொல்வதில்லை. பிறர் செய்தாலும் பிடிப்பதில்லை.

புலால் உணவை வெறுப்பர். இனிப்பை விரும்புவர். இருந்த இடத்திலிருந்தே மலையையும் தகர்க்கும் அறிவு இவர்களுக்கு உண்டு Cயில் முதல் எழுத்து அமைவது போல் ஜென்ம புண்ணியம் எனலாம். நிச்சயம் பல சிறப்புகளை தொடர்ந்து தந்துகொண்டேயிருக்கும்.

Cயில் பெயர் ஆரம்பித்து 6ஆம் எண்ணில் கூட்டுத்தொகை அமைந்துவிட்டால் மட்டும் வாழ்வு முழுக்க போராட்ட நிலை ஏற்படலாம். இவர்களுக்கு திருமணத் தடை. தொழில் முடக்கம், பதவி உயர்வு இல்லாமை, வேலை வாய்ப்புத் தடை, மக்களிடம் மரியாதைக் குறைவு போன்றவை ஏற்படலாம்

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment