Tuesday 28 August 2012

திருமணபொருத்தம் பார்க்கும் முன்பு


திருமணபொருத்தம் பார்க்கும் முன்பு ஜாதகத்தில் என்ன என்ன பார்க்க வேண்டும்

மணமகன் மணமகள் ஜாதகத்தில்

1. முதலில் ஆண் பெண் இரு ஜாதகத்திலும் எதாவது ஒரு கேந்திரம் வலுப்பெற்று இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்

2 ஆயுள் பாவமான எட்டாம் இடம் சுத்தமாக இருக்கிறதா என பார்க்க வேண்டும்

3. களத்திர பாவமான ஏழாம் இடமும் சுத்தமாக இருக்கிறதா தீய கிரகங்களின் பார்வை படாமல் இருக்கிறதா எனறு பார்க்க வேண்டும்

4 பூர்வ புண்ணியஸ்தானம் புத்திரஸ்தானம் ஆகிய ஐந்தாம் இடம் வலுப்பெற்று இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்

5. இருவர் ஜாதகத்திலும் கிரக அமைப்பு , லக்கிண அமைப்பு ,யோக அமைப்பு ஆகியவற்றை கவனிக்க வேண்டும்.

6. இருவர் ஜாதகத்திலும், திருமண நடைப்பெறும் காலத்திலும் ஒரே தசை நடக்க கூடாது தசா புத்தியும் ஒன்றாக இருக்க கூடாது

இவைகளை நுணுக்கமாக ஆராய்ந்த பிறகே நட்ச்சத்திர பொருத்தம் பார்க்க வேண்டும். திருமண பொருத்தத்திவல் ஒன்றிரண்டு குறைகள் இருந்தாலும் பரவாயில்லை ஆனால் ரட்ச்சி பொருத்தம் என்ற மாங்கல்ய பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்

சிலர் மிருகசீரிடம் , மகம் , சுவாதி, அனுஷம் ஆகிய நட்ச்சத்திரங்களில்
பிறந்த ஆண் பெண்ணிற்கு எந்த வித விவாக பொருத்தமும் பார்க்காமல் திருமணம் செய்யலாம் என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் தவறான நடைமுறையாகும்

எல்லோருடைய வாழ்க்கையிலும் திருமணம் என்பது முக்கியமான நிகழ்ச்சி ஆகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது அனம் ஒத்து செயல்படுவது நிதானமாக பொருமையாக செயல்படுவது முறைப்படி செயல்படுவத, குழந்தைகள் வளர்ப்பு என பல விஷயஙகள்இருக்கிறது.

1 comment:

  1. sir nn peyar a.bashakhan naan 26/02/1986 1.50pm piranthen kanni raasi uthiram 3 am patham,naan en uravukara pennai kathalikkeren aval peyar n.nasheera avalai naan thirumanam sei vena, enakku eppothu thirumanam nadakkum,naan patta padippu padipena endru sollavum.

    ReplyDelete