Sunday 12 August 2012

சீன ஜோதிடம் அமைதி முயல்

சீன ஜோதிடம்
அமைதி முயல்

நேரம்: காலை 5.00 முதல் 7.00 வரை
உரிய திசை : கிழக்கு
உரிய காலங்கள்: வசந்த காலம் / மார்ச் மாதம்
நிலையான மூலகம்: மரம்
யின் /யாங்யின்

கடவுளர்கள் வைத்த ஆற்றைக் கடக்கும் போட்டியில் எலி முதலிலும் எருது இரண்டாவதாகவும், புலி மூன்றாவதாகவும் வந்து முதல் மூன்று வருடங்களின் சின்னங்களாக தெரிவு செய்யப்பட்டன. முயல் மிகவும் சாதுவானதும் மென்மையான உடல் கொண்டதாகவும் இருந்த போதும் அது நான்காவதாக வந்தது கடவுளர்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. காரணம் கேட்டபோது, முயல் தான் முதலில் ஆற்றை கடக்க என்ன செய்வது என்று யோசித்ததாகவும், பிறகு ஆற்றின் நடுவே இருந்த பாறைகளின் மேல் குதித்து குதித்து பாதி தூரத்தைக் கடந்ததாகக் கூறியது. பிறகு என்ன நடந்தது என்று கடவுளர்கள் ஆவலாகக் கேட்க, பாறை முடிவுற்றதும் தான் போட்டியில் ஜெயிக்க முடியாது என்று எண்ணிய நேரத்தில் அந்தப் பக்கம் ஒரு மரக்கட்டை மிதந்து வர அதைப் பற்றிக்கொண்டு தான் கரையைச் சேர்ந்ததாக முயல் கூறியதாம்.

இந்தக் கதை முயல் ஏன் நான்காவதாக வந்தது என்பதைக் குறித்துக் கூறப்படும் கதை.

1903 1915 1927 1939 1951 1963 1975 1999 2911 2923 2935 2047 ஆகிய வருடங்களில் பிறந்தவர்கள் அனைவரும் முயல் வருடத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தொடரைப் படிப்போர் தாங்கள் எந்த வருடத்தைச் சேர்ந்தவர் என்பதை முந்தையத் தொடர்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். இப்போது தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழ்கண்ட தேதிகளுக்குள் பிறந்திருந்தால் அவர்கள் அனைவரும் முயல் வருடத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

ஜனவரி 29, 1903 - பிப்ரவரி 15,1904
பிப்ரவரி 14, 1915 - பிப்ரவரி 02,1916
பிப்ரவரி 02, 1927 - ஜனவரி 22, 1928
பிப்ரவரி 19, 1939 - பிப்ரவரி 07,1940
பிப்ரவரி 06, 1951 - ஜனவரி 26,1952
ஜனவரி 25, 1963 - பிப்ரவரி 12, 1964
பிப்ரவரி 11, 1975 - ஜனவரி 30, 1976
ஜனவரி 29, 1987 - பிப்ரவரி 16,1988
பிப்ரவரி 16, 1999 - பிப்ரவரி 04,2000
பிப்ரவரி 03, 2011 - ஜனவரி 22, 2012

இனி இந்தத் தொடரில் முயல் வருடத்தைச் சேர்ந்தவர்களின் குணாதிசயங்களைப் பற்றி பார்ப்போம்.

முயல் வருடத்தைச் சேர்ந்தவர்கள் அதிர்ஷ்ட ராசியைப் பெற்றவர்கள். அந்த ராசிக்காரர்கள் நீண்ட ஆயுள் பெற்றவர்கள். நிலவின் அத்தனைச் சக்தியையும் பெற்றவர்கள். அவர்கள் அழகை ஆராதிப்பவர்கள். வசீகரமானவர்கள். மிகவும் மென்மையாகப் பேசுபவர்கள். அவர்கள் ராஜ தந்திரிகள். அமைதி விரும்பிகள். சாந்தமான வாழ்க்கை வாழ விரும்புவார்கள். அவர்களுக்கு அமைதியான மாலைப் பொழுது மிகவும் பிடிக்கும். அவர்கள் கலை நயம் மிக்கவர்கள். நல்ல அறிவார்ந்த பண்பாளர்கள். அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். அவர்களுக்கு கேட்காமலேயே பல அதிர்ஷ்டப் பரிசுகள் வந்து குவியும்.

அமைதியான, சாதுவான, விரும்பத்தக்க வகையில் உள்ள முயல்வாசிகள் மிகவும் உயர்ந்த நோக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களின் உள்ளுணர்வு கொண்டே ஊகித்து செயல்படும் தன்மை கொண்டவர்கள். பெரும்பாலும் முயல்வாசிகள் தங்களையும் தங்களைச் சுற்றியுள்ள இடங்களையும் மிகவும் அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்வர். அவர்களுக்கு கலை, அழகுபடுத்துதல், உடையலங்காரம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும்.

முயலைப் பலரும் கோழையாக எண்ணினாலும், அவர்கள் பிறவிலேயே மிகுந்த எச்சரிக்கைத் தன்மையும், விவேகமும் கொண்டவர்கள். முயல்வாசிகள் எந்தச் செயலையும் முழுமையாக அலசி ஆராயாமல், திடீரென முடிவு எடுத்து காரியத்தைச் செய்ய முன் வர மாட்டார்கள். செய்ய வேண்டும் என்று சட்டென குதிக்க மாட்டார்கள். அவர்களின் சாந்தமான குணம் போட்டிகளை எதிர்கொள்ள தடைச்செய்யும். அதனால் அபாயகரமான செயல்களைச் செய்ய ஆர்வம் காட்ட மாட்டார்கள். சில சமயம் நல்ல சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தாமல் விட்டுவிடுவார்கள்.

அவர்கள் சுகவாசிகளைப் போல் தெரிந்தாலும் அவர்கள் சிறந்த தந்திரிகள். அவர்கள் மனபலம் கொண்டவர்கள். அதனால் தங்கள் நோக்கத்தை அடைய அவர்கள் அமைதியாகவும், உறுதியாகவும் செயல்படுவர். அவர்கள் எந்தவிதத்திலும் ஆர்ப்பாட்டம் செய்து செயலில் ஈடுபட மாட்டார்கள்.

முயல்வாசிகள் எப்போதும் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள். தவறான வார்த்தைகளையும், பேச்சுக்களையும் பயன்படுத்த மாட்டார்கள். நீங்கள் செய்வதை நன்கு கவனித்து அனைத்துச்செயல்களையும் திறம்படச் செய்து, சமயத்தில் உங்களையே முந்த வல்லவர்கள். அவர்கள் மிகவும் மெத்தனமாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால் அது அவர்கள் எச்சரிக்கை தன்மை காரணமாக அப்படி இருக்கும். எல்லாவற்றையும் தீர ஆராய்ந்து, வரிக்கு வரி படித்து விட்டே தங்கள் கையொப்பத்தை இடுவார்கள். எல்லோரும் ஓடிக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் அமைதியாகவே இருப்பார்கள். செயலிலேயே வெற்றியும் பெறுவார்கள். தானும் வாழ்ந்து அடுத்தவரையும் வாழ விடும் தன்மை கொண்டவர்கள்.

எந்தப் பிரச்சனைகளிலும் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். கஷ்டங்களைக் கெண்டு அநுதாப்பட்டு உதவ முன் வருவார்கள். ஆனால் அதற்காக எதிர்த்துப போராட வேண்டுமென்றால், ஆள் கண்களில் பட மாட்டார்கள். உடனே வெளியேறி விடுவார்கள்.

அவர்களுக்குக் கஷ்டங்களும் துன்பங்களும் பிடிக்காத ஒன்று. முயல்வாசிகள் கஷ்டங்களைவிட்டு வெகு தொலைவில் ஓட எத்தனிப்பார்கள். பயம் ஏற்படும் போது அவர்கள் என்ன செய்வார்கள் என்றே தெரியாது. அவர்களை மிகவும் வற்புறுத்தினால் உறவே வேண்டாம் என்று வெட்டிச் சொல்லும் தன்மை கொண்டவர்கள். அவர்களிடம் பிறவியிலேயே எதிர்க்கும் தன்மை கிடையாது. அவர்கள் தங்கள் வழியில் பிரச்சினைகளை எதிர் கொள்வார்கள். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நன்கு அறிந்தாவர்கள். தங்கள்சொந்ந வியங்களையும் பாதுகாத்துக் கொள்ள நன்கு அறிந்தவர்கள். தங்கள் சொந்த விசயங்களையும் பொருட்களையும் கவனித்துக் கொள்ள என்ன விலை கொடுக்கவும் தயாராக இருப்பார்கள்.

என்ன நடந்தாலும் அவர்களுக்கு தங்கள் காலிலேயே நிற்கும் திறனைப் பெற்று தடைகளைத் தாண்ட வல்லவர்கள். தங்கள் மேல் அதி நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் திருப்தியாக வாழ்க்கை வாழ விரும்புவார்கள்.

தொழில்
வேலை இடங்களிலும் அவர்களின் அமைதியும், பணிவும் அவர்களை நம்பகமானவர்களாகக் காட்டும். மிகவும் கடினமான வியாபாரப் பேச்சுக்களை அமைதியான முறையில் பேசி முடிக்கும் திறன் அவர்களிடம் இருக்கும்.

அவர்கள் நன்கு தெளிவாகப் பேசும் தன்மை கொண்டவர்கள் என்பதால் அறிந்தவர்களும் நண்பர்களும் இவர்களின் அறிவுரைகளைக் கேட்க வருவார்கள். எந்தவொரு குழுவில் இருந்தாலும், முயல்வாசிகள் அமைதிக்குப் பெயர் போனவர்கள். சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால், அங்கு சமாதானம் செய்ய முன்னிற்பவர்கள் அவர்களாக இருப்பார்கள். எந்தச் சூழலிலும் அமைதியைக் கடைபிடித்து, ஆத்திரம் வேகமாகக் கோபம் வராத ஆசாமிகள் முயல்வாசிகள்.

அதனால் அவர்கள் அரசியல்வாதிகளாகவும் அதிகாரிகளாகவும் இருக்கத் தருந்தவர்கள். அவர்கள் ஆசிரியர், நடிகர்கள், உடை அலங்காரம் செய்பவர்கள், புத்தக வெளியீட்டாளர், பொதுச் சேவை செய்பவர் போன்ற தொழில்களில் ஈடுபடலாம்.

உறவு
முயல்வாசிகள் ரசனை மிக்கவர்கள். அடுத்தவரையும் மகிழ்விக்க வல்லவர்கள். எல்லோரைப் பற்றியும் நல்ல விதமாகச் சொல்ல விசயங்களை வைத்திருப்பார்கள். வெளியே சொல்லாவிட்டாலும், ஒருவரை நன்கு கணித்து அவர்களிடம் எப்படிப் பழக வேண்டுமோ அப்படிப் பழக வல்லவர்கள்.

முயல்வாசிகள் நன்கு கவனமாக இருப்பார்கள். அடுத்தவரின் பேச்சினை சரியாக செவி மடுத்துச் செயல்படுவார்கள். அவர்கள் இரக்க குணம் பெற்றவர்கள். இயற்கையிலேயே இனிமையான தன்மை பெற்றவர்கள். அதனால் அவர்கள் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு நம்பத்தகுந்த நண்பர்கள் பலர் இருப்பார்கள். முயல்வாசிகளுக்கு விரோதிகள் அவ்வளவாக இருக்க மாட்டார்கள்.

மனிதர்களை சரியாகப் புரிந்து கொள்ளும் குணம் அவர்களிடம் பிறவிலேயே இருப்பதால், அவர்கள் சற்றே அகந்தையுடன் நடப்பது போல் தோன்றும். அவர்கள் எப்போதும் நட்புடனும் பாசத்துடன் இருப்பார்கள்.

பொது இடங்களில் பாரையும் தர்ம சங்கடமான நிலைக்குத் தள்ள மாட்டார்கள். எப்படி ஒருவரைக் காக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கத் தெரிந்தவர்கள் என்பதால், அனைவராலும் விரும்பப்படும் ஜீவன்கள் இவர்கள். மிக நெருங்கிய உறவினர்கள் மத்தியில் சாகசிகளாக மயக்குபவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் இருக்கும் பிறவிக் குணமான எச்சரிக்கைத் தன்மை அவர்களை நிலையான உறவு வைத்துக் கொள்ள தடை செய்யும். அதனால் கண்டதும் காதல் என்பது இவர்களிடம் சற்று கடினமே.

நட்பும் தோழமையும் மிகக் கொண்டவர்கள். சச்சரவு ஏற்படும் போது எதிர் தரப்பினரைப் பற்றியும் எண்ணிப் பார்பர். அவர்கள் நண்பர்களையும் உறவினர்களையும் நம்பி விட்டால் அதில் வலுவாக இருப்பார்கள்.

சுகாதாரம்
அவர்களுக்கு எப்படி, எப்போது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது நன்கு தெரியும். அவர்கள் மன அமைதியின்றி தவிக்கும் போது மிகவும் வித்தியாசமாக நடந்த கொள்வார்கள். அவர்கள் மனச் சங்கடங்கள் ஏற்படும் போது அதைப் பற்றி வெளியில் காட்டிக் கொள்ளாமல் தங்களுக்குள்ளாகவே வைத்து மருகுவார்கள். அதானல் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகும் நிலை கூட ஏற்படும். அவர்களது சங்கடங்களை தினசரி காரியங்கள் செய்து, மறக்கச் செய்தால் உடல் நிலை சீராகும்.

முயல் வருடத்தைய பிரபலங்கள்

அவிநாசலிங்க செட்டியர், பாரதி தாசன், பீர்பல் சகனி, பெருந்தலைவர் காமராசர், கண்ணதாசன், பெரியார், சிவாஜி கணேசன், நடிகை ஷ்ரீ தேவி, நடிகர் சூர்யா, யேசுதாஸ், சாகிர் ஹூசைன், ஆல்பர்ட் ஐான்ஸ்டீன், பதினான்காம் போய் பேனடிகடட், டேவிட் பெக்காம், டைகர் ஊட்ஸ், விட்னி, ஹூஸ்டன்

அதிர்ஷ்ட எண்கள்:
1,3,5,9,15,19,35

ஒத்துப் போகும் விலங்குகள்: பன்றி, நாய், ஆடு

ஒத்துப் போகாத விலங்குகள்: சேவல், எலி

முயல்வாசிகள் ஐந்து மூலகங்களுடன் சேரும் போது வெவ்வேறு குணங்களைப் பெறுவதாகச் சீன ஜோதிடம் நம்புகிறது.

நெருபபு முயல்
பிப்ரவி 02, 1927 - ஐனவரி 22, 1928
ஐனவரி 29, 1987 - பிப்ரவரி 16. 1988

குணங்கள் அன்பு, உணர்ச்சி வசப்படுதல், கூர்ந்து நோக்குதல், பாராட்டை எதிர்பார்த்து உழைத்தல் போன்ற குணங்களைக் கொண்டவர்கள். தீ முயர்வாசிகளை புதிய புதிய சாகசங்களை எதிர் கொள்ள வைக்கும்.

மர முயல்
பிப்ரவரி ே14, 1915 - பிப்ரவரி 02, 1916
பிப்ரவரி 11, 1975 - ஜனவரி 30, 1976

குணங்கள்
இரக்கம், தாராளத் தன்மை, கூர்ந்து யோசிக்கும் தன்மைகளைப் பெற்றவர்கள். அடுத்தவர்களை திருப்திப் படுத்த முயல்வர். பிறருக்காக அதிகமாக வேலை செய்யக் கூடியவர்கள். அவர்களுக்குக் தெரியமலேயே அவர்களிடம் எல்லாரும் காரியங்களைச் சாதித்துக் கொள்வர்.

பூமி முயல்
பிப்ரவரி 19, 1939 - பிப்ரவரி 07, 1940
பிப்ரவரி 16, 1999 - பிப்ரவரி 04,2000

குணங்கள் செல்வத்தில் நாட்டம், ஆர்வம், சம நோக்கு, கவலை போன்ற தன்மைகளைப் பெற்றவர்கள். அவர்களது ஆலோசனைகள் மிகவும் உண்மையானவையாக இருக்கும். குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் முக்கியத்துவம் தருவர்.

உலோக முயல்
பிப்ரவரி 06, 1951 - ஜனவரி 26, 1952
பிப்ரவரி 03, 2011 - ஜனவரி 22, 2012

குணங்கள் கலை நயம், சாந்தம், உணர்ச்சி வசப்படுதல், ஆராய்ந்து அறியும் தன்மை ஆகியவற்றை பெற்றவர்கள். அவர்கள் பலசாலிகளாகவும் குறிக்கோளுடையவர்களாகவும் இருப்பார்கள்.

நீர் முயல்

ஜனவரி 29, 1930 - பிப்ரவரி 15. 1904
ஜனவரி 25, 1963 பிப்ரவரி 12, 1964

குணங்கள் மென்மை, அமைதி தரும் ஊக்கம், நடுவு நிலைமை, அகிம் வெளியாட்களுடன் பழகாத குணம் போன்ற குணங்களைக் கொண்டவர்கள் வாழ்க்கை போகும் திசையில் செல்லும் தன்மை, பிரச்சினைகளை தவிர்க்கும் தன்மை, அடுத்தவருக்கு உதவு செய்யும் தன்மை பெற்றவர்கள்.

நீங்கள் முயல் வருடத்தில் பிறந்திருந்தால், மேற் சொன்ன குணங்களைக் கொண்டிருப்பீர்கள் என்று சீனர்கள் கணிக்கின்றனர். முயல் வருடம் புலி வருடத்தைப் போன்று வெடிக்காமல் மிகவும் அமைதியைக் தரக் கூடிய வருடம். கஷ்டங்கள் அதிகம் இராமல், மிதமான வருடமாக இருக்கும்.

No comments:

Post a Comment