Monday 6 August 2012

பிறரிடம் ஏமாறும் தோஷம் நீங்க பரிகாரம் என்ன?


ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இல்லாமல் இருந்தால்அது அவயோகம் அல்லது கேமத்துருவ யோகம் என்று அழைக்கப்படும்.

இத்தகையோர் பலரால் ஏமாற்றப்படுவர்.
பரிகாரம் என்ன?

ஜாதகத்தை ஆராய்ந்து சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இல்லாமல் இருந்தால் கிருஷ்ணன் கோவிலில், வளர்பிறை ஏகாதசி திதியில் அவல் பொரி பாயாசம் வைத்து நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு வழங்கி, அவயோக தோஷம் நீங்க பெறலாம்.

கோவிலுக்குச் சென்று பரிகாரம் செய்ய முடியாதவர்கள் வளர்பிறை ஏகாதசி திதியில் தங்கள் வீட்டிலேயே அவல் பொறி பாயாசம் வைத்து நைவேத்தியம் செய்து, பாயாசத்தை முதலில் பசு மாட்டிற்குக் கொடுத்து விட்டு தனக்குத் தெரிந்தவர்களுக்கும் அயலாருக்கு கொடுத்தாலும் தோஷம் நீங்கும்.

No comments:

Post a Comment