Monday 13 August 2012

சீன ஜோதிடம் உழைப்பாளி எருது

சீன ஜோதிடம்
உழைப்பாளி எருது
நேரம் இரவு 1.00 முதல் 3.00 வரை
உரிய திசை வடக்கு / வட கிழக்கு
உரிய காலங்கள் குளிர்காலம் / ஜனவரி மாதம்
நிலையான மூலகம் நீர்
யின் / யாங் யின்
ஆற்றை கடக்கும் போட்டி ஆரம்பமானது. எருதுக்குத் தெரியாமல் எலி அதன் மேல் சவாரி செய்தது. எருது அக்கரையைச் சேரும் போது, அதற்குத் தெரியாமல் சவாரி செய்த எலி, அதற்கு முன்பாக கரையில் குதித்து முதல் இடத்தைப் பெற்றது. எருது இரண்டாவது இடத்தைப் பெற்றது.

இந்தக் கதை எருது ஏன் இரண்டாவதாக வந்தது என்பதைக் குறித்துக் கூறப்படும் கதை.
1901, 1913, 1925, 1937, 1949, 1961, 1973, 1985, 1997, 2009, 2021, 2033, 2045 ஆகிய வருடங்களில் பிறந்தவர்கள், அனைவரும் எருது வருடத்தைச் சேர்ந்தவர்கள். கீழ் கண்ட தேதிகளுக்குள் பிறந்திருந்தால் அவர்கள் அனைவரும் எருது வருடத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

பிப்ரவரி 19, 1901 - பிப்ரவரி 07,1902
பிப்ரவரி 06,1913 - ஜனவரி 25, 1914
ஜனவரி 25, 1925 - பிப்ரவரி 12, 1926
பிப்ரவரி 11, 1937 - ஜனவரி 30,1938
ஜனவரி 29, 1949 - பிப்ரவரி 16,1950
பிப்ரவரி 15, 1961 - பிப்ரவரி 04 1962
பிப்ரவரி 03,1973 - ஜனவரி 22, 1974
பிப்ரவரி 20,1985 - பிப்ரவரி 08 1986
பிப்ரவரி07,1997 - ஜனவரி 27, 1998
ஜனவரி 26,2009 - பிப்ரவரி13 2010

இனி இந்தத் தொடரில் எருது வருடத்தைச் சேர்ந்தவர்களின் குணாதிசயங்களைப் பற்றி பார்ப்போம்.

எருது வருடத்தில் பிறந்தவர்கள் சாந்தமானவர்கள் போல் காணப்படுவார்கள். ஆனால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் மிகவும் கோபக்காரர்கள். அவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள். தங்களது குறிக்கோளை அடைய தொடர்ந்து அயராது உழைக்க தயங்க மாட்டார்கள். படிப்படியாகத் தங்கள் குறிக்கோளை எட்ட முயற்சி செய்வார்கள்.அவர்கள் மிகுந்த பிடிவாதக்காரர்கள். கர்வம் மிக்கவர்கள். வெளிப்பார்வையில் அவர்கள் அமைதியாக இருந்தாலும், அவர்களுக்கு இறுமாப்பு அதிகம் கொண்டவர்கள்.

எருதுவாசிகள் பண்பாட்டை மதிப்பவர்கள். நேர்த்தியாகத் தங்களை வைத்துக் கொள்வார்கள். அவர்களது பார்வையிலிருந்து எதுவுமே தப்ப முடியாது. எதையும் வெளிப்படையாகவே பார்ப்பார்கள். எருதுவாசிகள் மிகவும் வேகமாக விசயங்களை கிரகிக்க வல்லவர்கள். விசயத்தின் நல்லது கெட்டதை உடன் புரிந்து செயல்படுவர். தங்களுக்கு புரியாத விசயங்களை நம்ப மாட்டார்கள். நல்லது அல்லது கெட்டது என்பதை மட்டுமே பார்ப்பார்கள்.

எருதுவாசிகள் மிகவும் சுத்தமாகவும், உண்மையாகவும், உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு நல்ல ஞாப சக்தி இருக்கும். மற்றவர்கள் மறக்கும் சில சிறிய விசயங்களையும் ஞாபகப்படுத்தி சொல்லக் கூடியவர்கள். ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு வருட நினைவுகளையும் ஞாபகம் வைத்துக் கொள்ளத் தக்கவர்கள். அவர்களுக்கு வருத்தம் ஏற்படும் போதும், துன்பம் வந்த போதும் மன அமைதி ஏற்படும் வரை ஏதாவது வேலையில் தங்களை ஆழ்த்திக் கொண்டு விடுவார்கள்.

எருதுவாசிகள் உதவி கேட்க வெறுப்பார்கள். ஒரு செயலைச் செய்ய இரண்டு மடங்கு நேரமும் முயற்சியும் தேவையானாலும் கூட, அதை யாருடைய உதவியும் இன்றி தாங்களாகவேச் செய்ய முயல்வார்கள். அடுத்தவர்களை எதிர்பார்க்க மாட்டார்கள். பிறர் செய்யும் காரியங்களைக் கவனமாக கவனித்து, தங்களை பலப்படுத்திக் கொள்வார்கள்.
நெடுநாளைய முதலீடுகளை மிகவும் திறமையுடன் கையாள வல்லவர்கள். அவர்கள் பெரும்பாலும் சூதாட்டத்தில் கவனம் செலுத்த மாட்டார்கள். அவர்கள் தங்கள் குணத்தாலும் முயற்சியாலும் தங்கள் வெற்றியைத் தேடிச் செல்வார்கள். அதிர்ஷ்டத்தையும் அடுத்தவர் உதவியையும் என்றுமே நம்ப மாட்டார்கள்.

எருதுவாசிகள் தங்கள் கடன்களை எப்போதும் அடைந்து விடுவார்கள். அவர்கள் யாருக்கேனும் கடன்பட்டு இருந்தால், அதன் கடைசி காசைக் கொடுக்கும் வரை ஓயமாட்டார்கள். அவர்கள் நன்றி மறவாதவர்கள். தங்கள் நன்றியை அழகு வார்த்தைகயில் பேசாவிட்டாலும், பல வழிகளில் தங்கள் நன்றியைக் காட்டுவார்கள். அவர்கள் செயல்கள் அவர்களது வார்த்தைகளை விட அதிகம் பேசும். எருதுவாசிகளின் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும் காரணத்தால் மற்றவர்களை ஊக்குவிக்க வல்லவர்கள். பெரும்பாலும் அமைதியும், பொறுமையும் கொண்டவர்களாதலால், அளவாகவே பேசுவார்கள். வேண்டிய போது பேசுவனவற்றை வார்த்தைச் சுத்தமாகவும் கவனமாகவும் பேசுவார்கள்.

குறுக்கு வழியை நம்பாதவர்கள். உழைக்க விருப்பமில்லாதவர்களையும் சோம்பேறிகளையும் மதிக்கத்தகாதவர்களாக எண்ணுபவர்கள். அடுத்தவர்களின் அபிப்பிராயத்தை திறந்த மனம் கொண்டு கேட்டுக் கொள்வார்கள். தங்களது மனம் கொண்டு கேட்டுக் கொள்வார்கள். தங்களது அறிவார்ந்த ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுப்பார்கள்.
வயதான காலத்தில் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

தொழில்
எருதுவாசிகள் மிகவும் நம்பகமானவர்கள் வேலையை முடிக்கும் வரை தங்களது செயல்களை திட்டமிட்டு, தொடர்ந்து செய்த வண்ணம் இருப்பார்கள். அவர்கள் நடுநிலை கொண்டவர்கள். இவ்வளவு நற்குணங்கள் கொண்ட போதும் அவர்களது அடமும் கோபமும் சில சமயம் அவர்களது பலவீனங்களாக அமைந்து விடும்.

எருதுவாசிகளின் நம்பகமான தன்மையின் காரணமாக அவர்கள் பல நேரங்களில் உயர்ந்த அதிகாரத்திலும் பொறுப்புகளிலும் இருப்பவர்களாக திகழ்வார்கள். அவர்கள் உலகில் எல்லாரையும் விட மேலே மேலே செல்ல விருப்பம் கொண்டவர்கள். அவர்கள் தாங்கள் செய்யும் தொழிலுக்கு மட்டும் அடிமையாகாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். எருதுவாசிகள் சமயம் வரும்போதே தலை சிறந்த தலைவர்களாகவும், பேச்சாளர்களாகவும் இருப்பார்கள். கடினமான நேரங்களிலும் கூட அவர்கள் அறிவு தரி கெட்டுப்போகாமல் சரியான வழியில் செயல்படும் தன்மை கொண்டவர்கள்.

ஒரே மாதிரியான வேலையைச் செய்ய விரும்புவார்கள். ஆனால் செய்யும் வேலையை கோர்வையாகவும் நேர்த்தியாகவும் செய்ய முயல்வார்கள். எதையும் கவனமாகச் செய்ய எண்ணுவார்கள். எருதுவாசிகள் கூட்டு முயற்சிகளில் அதிகம் கலந்து கொள்ள மாட்டார்கள். வீண் பேச்சுக்கும் ஆடும்பர பகட்டுக்கும் இடம் தர மாட்டார்கள். அவர்களின் பிறவிக்குணமே தலைமை தாங்கும் குணம். அவர்கள் கைத்திறன் மிக்கவர்கள் என்பதால் மருத்துவர்களாகவும், அறுவை சிகிச்சை நிபுணர்களாகவும், கட்டிட வல்லுநர்களாகவும் இருக்கத் தகுந்தவர்கள். போர் வீரர்களாகவும், வியாபார வல்லுநர்களாகவும் இருக்கலாம்.

உறவு
அவர்கள் குடும்பத்தை அன்புடன் கவனித்துக் கொள்வார்கள். வீட்டை அதிகம் விரும்புவார்கள். குடும்பத்தினருக்கு தேவையானவற்றை சரியான நேரத்தில் தர வல்லவர்கள். தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தங்கள் பங்கிற்கு நிறையவே செய்யக் கூடியவர்கள். தாங்கள் விரும்புபவர்களிடம் அடங்காத விசுவாசம் கொள்பவர்கள். அவர்களின் எதிரிகளை எப்படி எதிர்பார்ப்பார்கள் என்று சொல்லவே முடியாது. அதனால் எருதுவாசிகளை எதிர்க்க முயலாதீர்கள். அவர்களுடன் நெருங்கிய நட்பு கொள்வதற்கு பல காலம் பழக வேண்டியிருக்கும். ஆனால் பழகி விட்டாலோ, அது மிகவும் பலமான நட்பாக அமையும். அவர்கள் ஒருவர் மேல் நம்பிக்கை வைத்து விட்டால் அவர்களுக்கு மிகவும் நம்பகமாகவும் அன்புடனும் நடந்து கொள்வார்கள்.

தனக்கு தகுந்த கூட்டாளிகளை நீண்ட நாட்கள் பழகிய பின்னரே தேர்வு செய்து கொள்வார்கள். உறவில் மாற்றங்களை விரும்ப மாட்டார்கள். எருதுவாசிகளுக்கு ஒருவர் மேல் நம்பிக்கை போய்விட்டாலும், கோபம் ஏற்பட்டாலும் அதைச் சீர் செய்து மீண்டும் உறவைப் புதுப்பித்துக் கொள்வது மிகவும் கடினம். பெண்கள் சிறந்த குடும்பத் தலைவிகளாகத் திகழ்வார்கள். குழந்தைகளின் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுவார்கள்.

சுகாதாரம்
அவர்கள் பொதுவாகவே மிகவும் நல்ல உடல்நிலைக் கொண்டவர்கள் அவர்கள் நோய்வாய்ப்படுவது மிகவும் கடினம். அதனால் அவர்கள் பலமில்லாதவர்களிடம் பழக விரும்ப மாட்டார்கள். அவர்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளும் பயிற்சிகளைச் செய்தல் நலம் சேர்க்கும். எருதுவாசிகள் வீட்டிலேயே இருப்பதை வசதியாக எண்ணுவார்கள். வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும் காரணத்தால் ஓய்வு பற்றிய கவனம் இருக்காது. எருதுவாசிகளுக்கு கோபம் ஏற்பட்டால், அவர்கள் இருக்கும் இடம் இரண்டு பட்டு விடும். அந்த நேரங்களில் எந்த வார்த்தைகளும் எடுபடாது. அவர்களாக அமைதியாகும் வரை பொறுக்க வேண்டும்.

எலி வருடத்தை பிரபலங்கள்
லியன்டர் பியஸ், ரமேஷ் கிருஷ்ணன், தினேஷ் கார்ததிக், ஹோமி பாபா, ஹிருதிக் ரோஷன், நீலம் சஞ்ஜிவ ரெட்டி, சச்சின் தெண்டுல்கர், நெப்போலியன் போனபார்ட், வால்ட் டிஸ்னி, ரிச்சர்ட் நிக்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், சார்லி சாப்லின்.

அதிர்ஷ்ட எண்கள் : 1,5,12,15,33,35,51,53

ஒத்துப்போகும் விலங்குகள் : எலி, சேவல், பாம்பு

ஒத்துப் போகாத விலங்குகள் : புலி, குதிரை, ஆடு

மூலகக் குணங்கள் :
எருதுவாசிகள் ஐந்து மூலகளுடன் சேரும்போது வெவ்வேறு குணங்களைப் பெறுவதாகச் சீன ஜோதிடம் நம்புகிறது.

நெருப்பு எருது
(பிப்ரவரி 11,1937 - ஜனவரி 30, 1938)
பிப்ரவரி 07, 1997 - ஜனவரி 27, 1998)

குணங்கள் : சக்தி வாய்ந்த, பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும், போராடும், தன்மை கொண்டு, குறிக்கோளோடு வாழும் குணங்களைக் கொண்டவர்கள். பிறவித் தலைவர்கள்.

மர எருது :
( ஜனவரி 25, 1925 - பிப்ரவரி 12, 1926
பிப்ரவரி 20, 1985 - பிப்ரவரி 08,1986)

குணங்கள் : ஐதிகத்தில் நம்பிக்கை, எந்தச் சூழலையும் ஏற்றல், நீதி நெறிப்படி வாழ்தல், நடுவு நிலைமை, உண்மையுடன் ஊக்கத்துடன் செயல்படுதல் போன்ற குணங்களைக் கொண்டவர்கள்.

பூமி எருது :
(ஜனவரி 29, 1949 - பிப்ரவரி 16, 1950
ஜனவரி 26, 2009 - பிப்ரவரி 13, 2010)

குணங்கள் : துணிவு, சகிப்புத் தன்மை, பொறுமையுடன் செயல்படுதல், உண்மையுள்ள குறியை நோக்கி பயணிக்கும் குணங்களைக் கொண்டவர்கள்.

நீர் எருது :
( பிப்ரவரி 06, 1913 - ஜனவரி 25, 1914
பிப்ரவரி 03, 1973 - ஜனவரி 22, 1974)

குணங்கள் : காரியங்களை முறையாகச் செய்தல், மனோபலத்தின் மூலம் ஊக்கம் கொண்டு செயல்படுதல், பொறுமை, அநுபவத்தை நம்பும் குணம், நடுவு நிலைமை போன்ற குணங்களைக் கொண்டவர்கள்.

No comments:

Post a Comment