ஆரப்பா கரும்பாம்பு ஆறிலேற |
இன்னுமொன்றையும் நீ கருத்துடன் கேட்பாயாக! இராகு எனும் கரும்பாம்பு இலக்கினத்திற்கு ஆறில் நிற்கவும் செம்பாம்பு ஆன கேது 12ஆம் இடத்தைச் சேரவும் சிறப்புடைய குருபகவான் கேந்திரம் ஏறியும் நிற்கப் பிறந்த ஜாதகன் அஷ்டலக்ஷ்மியாள் யோகம் பெற்றவனாவான். சிவபரம்பொருளின் கருணையிதுவே. எனவே இச்சென்மன் பூதங்களுக்கு பலி பூசை முதலியன நல்கித் தன் மனையிலோ விளைவயலிலோ உள்ள கிணற்றிலிருந்து அனேக திரவியங்களை வெளியெடுத்து அதனால் வெகுவான பாக்கியங்களையும் அனுபவிப்பான், தன் மனையில் மகிழ்ச்சி இழையோடுவதைக் காண்பான் என்று போகமா முனிவரின் அருளாணை பெற்ற புலிப்பாணி கூறினேன்.
No comments:
Post a Comment