Saturday 4 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 44 - செவ்வாய் 1,10,2,11,6 ல் தரும் யோகம்


கேளப்பா செவ்வாயும் ஒன்று பத்து
கனமுள்ள தனலாபம் ஆறில்நிற்க
ஆளப்பா அகம்பொருளும் நிலமும் செம்பொன்
அப்பனே கிட்டுமடா தொழிலுமுள்ளோன்
சூளப்பாரு குடித்தலைவன் சத்துருபங்கன்
கொற்றவனே வகையாகப் பகர்ந்து சொல்லே


புலிப்பாணி ஆகிய நான் சொல்லும் இக்குறிப்பினையும் நீ நன்கு உணர்ந்து கொள்வாயாக! செவ்வாய் கிரகமானது 1,10,2,11,6 ஆகிய இடங்களில் அமர்ந்திருப்பின், அவனுக்கு மனை வாய்த்தாலும், செம்பொருட்சேர்க்கையும், சிறந்த நிலமும்,செம்பொன்னும் கிட்டுமென்றும், செய்தொழில் விருத்தியுடையவன் என்றும் பல குடும்பங்களைக் காக்கும் தலைவன் என்றும், எதிரிகளை வெற்றி கொள்ளும் வீரனென்றும் மற்றைய கிரக நிலவரங்களை ஆராந்து கூறுவாயாக.

இப்பாடலில் செவ்வாய் இலக்கினத்திலிருந்து 1,10,2,11,6 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment