Tuesday 14 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 297


அட்டமாபதிதிசைகேளு-அவன் - சப்தமத்தில் கோணங்கள் கேந்திரிக்க-அவன் செய்யும் கொடுமைகளை-நானும்-அடவுடனே சொல்லத் துடங்குகிறேன்-நட்டப்பயிர் தீக்கடுவன்-நலமுள்ள-சுகங்காட்டி மெத்தக் கெடுத்திடுவன்-ராஜமுகங் கொண்டுபோவான்-அரசால் சிறைக்காவல் பூண்டு மீண்டு வருவன்-மனையோடு மாடகூடம்- நல்ல பொக்கிஷங்களெல்லாம் - கொள்ளையிடுவான்-மாறாலடிபடுவன்-நல்ல- மனையாளை வேறு படுத்திடுவன்-மூலையில் உறங்க வைப்பன்-முழுவதும்-பட்டினியே போட்டு வருத்திடுவான்-கண்டோரேசிடவும்- கடையினில்- கையேந்தியொரு காசுக்குக் காத்திருப்பன்-பந்து ஜனமெல்லவரும்- யிவனுக்கு போக்கு வழிதேடுவரிழுத்துவிட்டு- கட்டு கொட்டு வெட்டுகளும்- கனத்த சண்டையில் தாக்கி கொன்றிடுவன்-ஒருவன் களத்திரத்தை- நல்ல உன்னத போகங்கள் செய்திடுவான்-சித்திரப் புதுமைபெற்ற-நல்ல சீமாட்டி வாசலில் காத்திருப்பன்-இந்திரலீலை சுந்தர வைபோகம் க்ஷணத்தில்-துன்பத்தைக் காட்டியே யின்பஞ்செய்வன்-போகர் சொன்ன விதி நொண்டியை புலிப்பாணி கிளிப்பிள்ளை சொல்லு போலுரைத்து விட்டேன்-அட்டமாதிசையும் கூறு-நானும்-அணுவுக்கு அணுவாக உரைத்து விட்டேன்-தன்னாதன தன்னா.


இலக்கினத்திற்கு உரிய அட்டமாதிபன் 7,1,5,9,1,4,10, ஆகிய இடங்களில் அமர அவன் செய்யும் கொடுமைகளை நான் மிக அழகாகக் கூறுகிறேன். அதையும் நீ நன்குணர்ந்து கேட்பாயாக. விளைச்சல் மிக்கவயலில் தீப்பாயும். வெகு சேதம் விளையும். அரச கோபம் உண்டாகும். அநியாய தண்டங்கள் ஏற்படும். சிறையுண்டு இச்சாதகனுக்கு, ஆயினும் மீண்டும் வந்து மாடு, மனை, மக்களுடன் வெகுதனவானாய் வாழ்ந்து மேலும் மேலும் பல அரசர்களின் பொக்கிஷங்களை எல்லாம் கொள்ளை இடுவான். விளக்கு மாற்றால் அடிபடுபவனும் இவனே. நல்ல மனைவியை வெறுத்துப் புறம் போவான்; அம்மனையாளை ஒரு மூலையில் உறங்க வைப்பான்; பட்டினிபோடுவான். முழுவதும் பட்டினி போட்டு வருத்துவதுடன், பிறர் ஏசிடவும் வைப்பான். புறங்கடையில் கையெந்திப் பிச்சையும் ஏற்றிடச்செய்வான்; இன ஜனபந்துக்களால், இவனுக்கு வெட்டு, குத்து ஆகியவை ஏற்படும்., இவன் நகரமக்களால் தெருவில் கொல்லப்படுவான். இவர்களிலும் உன்னதன் ஒருவன் உத்தமக் களத்திரம் பெற்றோன் என்றால், இவனே உன்னத போகங்களை அனுபவிப்பவன். நல்ல சித்திரம் போலும் பதுமை போலும் நல்ல சீமாட்டி வாயிலும் இவனுக்காகக் காத்திருக்கும்: இந்திர லீலை சுந்தர வைபோகம் ஆகியவை ஒரு க்ஷணத்தில் துன்பம் காட்டி பின் இன்பம் செய்வான் என்று எனது குருநாதரான போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment