Tuesday 14 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 293


பத்தோன் திசையை நீபாரு--மாதே
பத்தேழில் ஒரைந்தில் கேந்திரமேற
வத்தாத செல்வங்கல் கொடுப்பன்--சுகம்
கருமமும் வேட்டலும் சொல்லுவாய்தோழி
சங்கர சங்கர சம்போ சிவ
சங்கர சங்கர சங்கர சம்போ


பத்துக்குடைய கர்மாதிபன் திசையைப் பற்றி இனிக் கூறுகிறேன். இதனையும் நீ கேட்பாயாக! இப்பத்திற்குடையவன், 1,4,7,10 ஆகிய கேந்திரங்களிலும் திரிகோணஸ்தானமான 5-ஆம் இடத்திலும் தேறி நின்றால் வற்றாத செல்வ வளங்களைத் தருவான். சுகம் மெத்தவும் உண்டென்றாலும் கர்மம் செய்ய நேர்தலும் கண் பார்வையுண்டென்றும் நீ கணித்துச் சொல்வாயாக எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment