Tuesday 14 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 287




நாலவன் திசையை நீகேளு---மாதே
நாலேழிலாபத்தில் கேந்திரமேற
சீலமாயிவனுக்கு கூறு--நல்ல
செந்நெல் வயல்களூம் நிதியும் சொல்தோழி
சங்கர சங்கர சம்போ சிவ
சங்கர சங்கர சங்கர சம்போ


வீடு, வாகனம் முதலியவற்றை விஸ்தாரமாகச் செல்லும் நான்காம் வீட்டிற்குடையோனின் திசையினைப் பற்றிக் கூறுகிறேன். அதையும் நீ நன்கு கவனித்துக் கேட்பாயாக! இந்த நான்காமதிபன் 1,4,7,10 ஆகிய கேந்திரங்களிலும் 11-ஆம் இடமான இலாபஸ்தானத்திலும் தேறி நிற்க குணம் பல உடைய இச்சாதகனுக்கு நல்ல செந்நெல் விளை வயல்களும் இருவகைத் தனவருவாயும் (காலாலும், கலத்தாலும்) ஏற்படும் என்றே கூறுவாயாக என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

No comments:

Post a Comment