Tuesday 14 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 285


ரெண்டவன் திசையைக்கேளு-அவன்
ரெண்டேழிலீரைந்து லாபமுமேற
பெண்டுபிள்ளைகளுடன் வாழ்வன் --மாதே
சுகமுடன் ஆண்மையும் நீதியும் சொல்தோழி
சங்கர சங்கர சம்போ சிவ
சங்கர சங்கர சங்கர சம்போ


தனம், குடும்பம், வாக்கு ஆகியவற்றை நிர்ணயிக்கும் இரண்டுக்குடையவன் திசையைப்பற்றிச் சொல்கிறேன் கேட்பாயாக! இவ்விரண்டுக்குடையோன் 2,7,10,11 ஆகிய இடங்களில் நிற்க இச்சாதகன் பெண்டு பிள்ளைகளுடன் சுகித்து வாழ்பவனாவான், அது மட்டுமல்லாமல் ஆளுமைத் தன்மை மிகுந்தவனாகவும் நிறை தனம் பெற்றவனாகவும் இருப்பான் என்று போகரது அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment