Tuesday 14 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 284


ஒண்ணவன் விரயமுமாகி - மாதே
ஒன்பதில் வெள்ளியு மாட்சியுமேற
சொன்னேனேயிவனுக்கு விதவை-சொத்து
கிஞ்சிற்று உண்டென்று சொல்லடிதோழி
சங்கர சங்கர சம்போ சிவ
சங்கர சங்கர சங்கர சம்போ


இலக்கினாதிபன் விரயத்தில் நிற்க சுக்கிரபகவான் என்றும் வெள்ளி என்றும் விளம்பப்படும் பார்க்கவன் ஒன்பதாம் இடத்தில் ஆட்சி பெறின் இச்சாதகனுக்கு விதவையின் சொத்து சிறிது உண்டென்று கூறிப்பலன் நிகழ்த்துவாயாக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment