Monday 13 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 275 - சுக்கிர மகாதிசை, சனி புத்திப் பலன்கள்


உண்டாகும் சுக்கிர தசை சனியன்புத்தி
உண்மையுள்ள மாதமது முப்பத்தெட்டு
தெண்டாடும் தினபலனை சொல்லக்கேளு
திரவியமும் பூமிமுதல் சேரும்பாரு
நன்றாகும் அரசர்பதி யாவாய்பாரு
நன்மையுள்ள மாதர் மைந்தர் நாடு நகர்உண்டாம்
சென்றாகும் செல்வபதி யாவான்பாரு
தீர்க்கமுள்ள மன்னனெனச் செப்பலாமே


சுக்கிர மகாதிசையில் சனிபகவானின் ஆதிக்க காலம் 3 வருடம் 2 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களாவன: வெகு தன லாபம் வாய்க்கும் பூமி, மனை முதலியன நேரும். அரச சம்பத்துடன் வாழ்வது நேரும். குலமாதர், நன்மைந்தர் அமைதலோடு நாடு நகரங்களும் உண்டாகும். மிகப்பெரிய தனவந்தனாகி ஆளுமை மிகுந்து ஒரு பெருமன்னன் என்று கூறக்கூடிய வகையில் அவனியில் பொலிவுற வாழ்வான் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment