Monday 13 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 274 - சுக்கிர மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்


காணவே சுக்கிரதிசை வியாழபுத்தி
கனமான மாதமது முப்பத்திரண்டு
தோணவே அதன்பலனை சொல்லக்கேளு
தோகையரும் மங்களமும் சுபயோகமாகும்
பேணவே பெருஞ்செல்வம் பெருகும்பாரு
பெரிதான புத்திரனும் பெண்களுண்டாகும்
நாணவே நாடுநகரம் உண்டாகும்பாரு
நன்மையுடன் வாகனமும் நட்புடனே உண்டாம்


சுக்கிர மகாதிசையில் வியாழ பகவானின், ஆதிக்க காலம் 2 வருடம் 8 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: மனம் விரும்பிய மங்கையரைச் சேர்தலும் அதனால் மங்களகரமான வாழ்வும் சுபயோகங்களும் நேரும். விரும்பிய வண்ணம் பெரும் பொருட் சேர்க்கை ஏற்படும். அச்செல்வம் மேலும் மேலும் பெருகிக் காணும். நன்மை தரத்தக்க ஆண் சந்தானமும் பெண் மக்களும் வாய்ப்பர். நாடு நகரங்கள் வசமாகும். பலவிதத்திலும் நன்மையும் வாகன யோகமும் ஏற்பட்டு சிறந்த நண்பர்களையும் பெற்றுச் சுகித்து வாழ்வான் எனப் போகர் கருணையால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment