Monday 13 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 272 - சுக்கிர மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்


தானென்ற சுக்கிரதிசை செவ்வாய்புத்தி
தாழ்வான மாதமது பதினாலாகும்
யேனேன்ற அதன் பலனை யியம்பக்கேளு
எலிகடியும் பீனிசமும் இளைப்பு முண்டாம்
வானென்ற வயத்தினிலே நோவுண்டாகும்
வகையுடனே ஆசனத்தில் கடுப்புண்டாகும்
தேனேன்ற தெரிவையர்கள் விகற்பமாகும்
தீதான சத்துருவும் சேர்வான்பாரே


சுக்கிர மகாதிசையில் செவ்வாயின் ஆதிக்க காலம் 1 வருடம் 2 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: எலி கடித்தலால் ஏற்படும் நெடுநாள் இருமல் முதலியனவும் வந்து பற்றிக் கொள்ளும். வயிற்றில் உபாதை ஏற்படும். குதத்தில் கடுப்பு உண்டாகும். பெண்களால் தொல்லைகள் ஏற்படும், கொடுமையான பகைவனும் வந்து பற்றிக் கொள்வான் என்று போகரின் பேரருட் கருணையால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment