Monday 13 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 267 - கேது மகாதிசை, சனி புத்திப் பலன்கள்


தானென்ற கேதுதிசை சனியின்புத்தி
தாழ்வான மாதமது பதிமூன்றாகும்
நானென்ற நாளதுவும் ஒன்பதாகும்
நலமில்லா அதன்பலனை நவிலக்கேளு
வானென்ற வான்பொருளும் கேடுவாகும்
வகையான மனைவியுடன் மக்களதும்போம்
மானென்ற பதிமூன்றில் மரணமாவான்
மனக்கவலை ரொம்ப உண்டு மாள்வான்பாரே


கேது மகாதிசையில் சனிபகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 1 மாதம் 9 நாள்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் தெளிவாகக் கூறுவோம். கவனமாகக் கேட்பாயாக! வானளாவிய செல்வமும், பெரும் பொருளும் சேதம் அடையும். நன்மையையே விரும்பிச் செய்யும் மனைவி மக்கள் கை விட்டுப் போதலும் நேரும். மூன்று மாத கால அளவில் மரணமும் நேரும். மிகுதியான மனக் கவலையால் பீடித்த இச்சாதகனுக்கு மரணம் நேர்தலும் உண்டு என்று போகமா முனிவரின் பேரருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் கேது மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment