Monday 13 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 263 - கேது மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்


பூணுவான் கேதுதிசை சந்திரபுத்தி
புகழான மாதமது நாலுமூணும்
ஆணுவான் அதன் பலனை அரையக்கேளு
ஆயிழையாள் விலகிநிற்பள் அதமமாகும்
தோணுவான் தோகையரும் புத்திரரும் பாழாம்
தொகுதியுடன் பொருளதுவுஞ் சேதமாகும்
நாணுவாள் நாரிகையும் சலத்தில் வீழ்ந்து
நன்றாகமடிந்திடுவான் நலமில்லைதானே


இக்கேது மகாதிசையில் சந்திர பகவானின் ஆதிக்க காலம் 7 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களாவன இவைதான் எனக் கூறுவோம். கவனித்துக் கேட்பாயாக! மனைவியானவள் , இச்சாதகனுடன் மனம் வேறுபட்டு விலகி நிற்பாள். அதர்மம் நேரும். மனைவி மக்கள் பாழடைவர். மிகப் பலவாகிப் பல்கி இருந்து பெரும் பொருள்கள் சேதமடைதலும் நேரும். தனது மனைவி தண்ணீரில் வீழ்ந்து தற்கொலை செய்து கொள்ளும் நலமில்லாத துர்ப்பலன் நிகழும். இது கண்டு இச்சாதகன் நாணுவான் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் கேது மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment