Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 258 - புதன் மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்


போமென்ற புதன் திசையில் வியாழபுத்தி
புகழுள்ள மாதமது யிருபத்தேழு
நாமென்ற நாளதுவும் ஆறதாகும்
நன்றாக வதன் பலனை நவிலக்கேளு
தாமென்ற சத்துருநோய் பயமும்போகும்
சகலசம் பத்துண்டாகும் தரணியில்வாழ்வன்
யோகமென்ற யோகமது கைக்குள்சிக்கும்
யேகமாம் புத்திரனும் யிதிலுண்டாகும்


புதமா திசையில் வியாழ பகவான் புத்திக் காலம் பெரும் புகழ் தருவதான 2 வருடம் 3 மாதம் 6 நாள்களாகும். இவர் தன் ஆதிக்க காலத்தில் அளிக்கும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! சத்துரு உபாதையும், நோயும், மனபயமும் நீங்கி சகலவிதமான செல்வ நலங்களும் பெருகி இப்பூமியில் பெரும் புகழுடன் வாழ்வான். சகலவிதமான யோகங்களும் சித்திக்கும். அனேக புத்திரர்களும் இச்சாதகனுக்கு உண்டாம் என்று போகர் பேரருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் புதன் மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment