Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 257 - புதன் மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்


பலனில்லா புதன் திசையில் ராகுபுத்தி
பாழான மாதமது முப்பதாகும்
நலமில்லா நாளதுவும் பதினெட்டாகும்
நன்றாக அதன் பலனை நவிலக்கேளு
பலமில்லாப் பிணிகளுடன் மயக்கம்சேதம்
புரட்டான சத்துருவால் பேதையர்கள் பாசம்
தலமில்லா வியாதியினால் நற்பொளும் சேதம்
நன்றான வீடுமுதல் பூமிநிதிபோமே


புதமகா திசையில் இராகு புத்தி தீங்கு தருகின்ற 2 வருடம் 6 மாதம் 18 நாள்களாகும். இவ்விராகு பகவான் இவரது ஆதிக்ககாலத்தில் நிகழ்த்தும் பலன்களாவன: தேக பலத்தைச சிதைக்கும். பலவித நோய்களும் மயக்கமும் ஏற்பட்டு அதனால் பெரும் பொருட் சேதம் உண்டாகும். முரண்பட்டுப் பேசக் கூடிய பகைவர்களால் அறிவற்றவர் நேசம் ஏற்படும். இடையீடில்லாத வியாதிகளால் பெரும் பொருள் சேதமாவதுடன் நல்ல கட்டுக்கோப்போடு வீடு முதலாக விளைவயலும் பெருநிதியும் அழியும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் புதன் மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment