Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 255 - புதன் மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்


தானென்ற புதன் திசையில் சந்திரபுத்தி
தாழ்வான் மாதமது பதினேழாகும்
தேனென்ற அதன் பலனைச் சொல்லக்கேளு
தெரிவையர்கள் கலகமுடன் யிளைப்புசயரோகம்
கோனென்ற ராசாவால் குடிகேடு செய்யும்
கோதையர்கள் தன்னாலே குடிபாழாகும்
வானென்ற வான்பொருளும் வகையில்லாச்சேதம்
வையகத்தில் நீதியில்லா மாதரைச்சேர்வாரே.


புதமகா திசையில் சந்திர புத்திக்காலம் 1 வருடம் 5 மாதங்களும். இவன் தன் ஆதிக்க காலத்தில் நிகழ்த்தும் பலன்களைக் கூறுகிறேன். கவனமாகக் கேட்பாயாக! பெண்களால் கலகமும் ,இளைப்புநோய், சயரோகம் முதலிய நோய் உபாதைகளும் ஏற்படும். அரசனின் தொல்லையால் குடும்பத்திற்கே கேடு உண்டாகும். அதேபோல் பெண்களாலும் குடும்பமும் பாழாகும். அளவில்லாத செல்வமும் எதிர்பாரா வண்ணம் அழியும். தீதியை நினையாத வேசையரைச் சேர்ந்தின்புறம் சந்தர்ப்பம் ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் புதன் மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment