Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 251 - புதன் மகாதிசை, புதன் புத்திப் பலன்கள்


அடியில்நின்ற புதன் திசைதான் வருஷம்பதினேழு
அதனுடைய புத்தியதுமாதம் நாலேழ்
முடியில்நின்ற நாளதுவும் மூவொன்பதாகும்
மூர்க்கமுள்ள அதன் பலனைக் கூறக்கேளே!
படியில்நின்ற பழம்பொருளும் பாவையருஞ்சேருவன்
பாங்கான சோபனமும் பாங்குடனேகாணும்
குடியில்நின்ற தெய்வங் குணமுடனேசேரும்
குடும்பத்தில் புத்திரனும் குணமுடனே வாழ்வான்


புதமகாதிசை மொத்தம் 17 ஆண்டுகளாகும். இதில் புதனது சுயபுத்தி 2 வருடம் 4 மாதம் 27 நாள்களாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களாவன: மூதாதையரின் கூட்டும் அதனால் மகிழ்ச்சியும் இன்பமும் நேரும். குலதெய்வம் மனமொன்றி இருந்து குடும்ப நலத்தைக் காக்கும். அதோடு குடும்பப் பொறுப்புணர்ந்து புத்திரனும் நற்குணம் நற்புகழ் பெற்று வாழ்வான் என்று போகர் அருளால் புலிப்பாணி பாடினேன்.

இப்பாடலில் புதன் மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment