Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 250 - சனி மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்


சாவில்லாக் காரிதிசை வியாழபுத்தி
சமான முள்ள மாதமது முப்பதாகும்
நாளில்லா நாளதுவும் பன்னிரெண்டாகும்
நன்மையுள்ள அதன்பலனை நவிலுவோம்கேள்
மாயில்லா மங்கையரும் மணமுடனே வருவாள்
மார்க்கமுள்ள பழம்பொருளும் வகையுடனே வரும்
காவில்லா வாகனமது கண்டெடுப்பான்பாரு
கனதையுள்ள சத்துருவும் காலடியில் வீழ்வான்.


இனி இச்சனிபகவானின் திசையில் வியாழ பகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 6 மாதம் 12 நாள்களாகும். நன்மை தரத்தக்க இக்கால கட்டத்தில் விளையும் பலன்களாவன: திருமணம் நடந்தேறும். மனத்திற்கேற்ப மனைவி அமைவாள். முதாதையர் பெரும் தனம் வகையாக வந்து சேரும். வாகனயோகம் அமையும். புதையல் தனம் கிடைக்கும், ஈனகுணம் மிக்க சத்துருக்களும் இச்சாதகனின் காலடியில் வீழ்ந்து அடிமைப் படுவர் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் சனி மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment