Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 249 - சனி மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்


உண்டாகும் காரிதிசை ராகுபுத்தி
உறுதியில்லா மாதமது முப்பத்திநாலு
கொண்டாகும் நாளதுவும் ஆறதாகும்
கொடுமையுள்ள அதன் பலனைக்குறித்துச் சொல்வோம்
விண்டான வியாதியுடன் வாந்தி காணும்
விதமான சரீரமதில் மேகரணமுண்டாம்
துண்டாகும் சரீரமது யிருபிளவாய்ப் போகும்
துன்பமுள்ள நாளதனில் சாவாம் மாசே.


இச்சனி பகவானின் திசையில் ராகுபகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 10 மாதம் 6 நாள்களாகும். கொடுமை செய்யும் இக்காலகட்டத்தின் பலன்களைக் குறித்துச் சொல்வேன் கேட்பாயாக! சொல்ல முடியாத நோய் வந்து பற்றும். வாந்தி காணும். தேகத்தில் ரணம் ஏற்படும். அங்கக்குறைவு ஏற்படும். அதனால் மரணமும் நேரும் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சனி மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment