Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 246 - சனி மகாதிசை,சூரிய புத்திப் பலன்கள்


தானென்ற காரிதிசை கதிரோன்புத்தி
தயவில்லா மாதமது பதினொன்றாகும்
நானென்ற நாளதுவும் பனிரெண்டாகும்
நன்கையில்லா அதன் பலனை நவிலக்கேளு
ஊனென்ற சுர பீடை ரெத்தமேறும்
உதிரத்தால் சூலைநோய் உடனேகாணும்
மானென்ற மனைவியரும் மக்கள் தானும்
மயங்குகின்ற நோவதனால் வருத்தங்காணே.


இனி இச்சனி திசையில் கதிரவனாகிய சூரியனது பொசிப்புக்காலம் 11 மாதம் 12 நாள்களாகும். இந்தக் கால கட்டத்தில் விளையும் பலன்களாவன: தேகத்தில் சுர உபாதை காணுதலும் ரத்த சம்பந்தமான நோயும் வயிறுபாதையால் வாடச் செய்யும். சூலை நோயும் உடன் காணும். அதுமட்டுமல்லாமல் மனம் விரும்பும் மனைவிக்கும் மக்களுக்கும் நோயுபாதை ஏற்பட்டு வெகு வருத்தத்தை நல்கும் என்பதை உணர்க என்று போகர் அருளால் புலிப்பாணி பாடினேன்.

இப்பாடலில் சனி மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment