Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 242 - சனி மகாதிசை,சனி புத்திப் பலன்கள்


கேளப்பா சனிதிசையில் மார்க்கங்கேளு
கொடியான வருஷமது பத்தொன்பதாகும்
கேளப்பா சனிபுத்தி வருஷம் மூன்று
கேடான நாளதுவும் மூன்றதாகும்
பாளப்பா பாவையரும் பாலன் தானும்
பாங்கான வருஷம் ஒன்றில் சாவதாகும்
ஆளப்பா அலைச்சலது மெத்தவுண்டாகும்
அளவில்லா தனச்சேத மாகுந்தானே


சனிமகாதிசை வருடம் 19-காக்கை வாகனனான அச்சனிபகவானின் பொசிப்புக்காலம் இதில் 3 வருடம் 3 நாள்களாகும். இக்காலகட்டத்தில் துன்பம் தரத்தக்க பலன்களே விளையும். அவையாவன: மனம் விரும்பிய பாவையரும் பாலகரும் மடிவார்கள். வெகுவான அலைச்சல் திரிச்சல் உண்டாகும். வெகுதன விரயம் ஏற்படும் என்று போகர் பேரருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சனி மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment