போமென்ற வியாழதிசை சுக்கிரபுத்தி |
வியாழ மகாதிசையில் சுக்கிர பகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 8 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: மனையில் அருளே உருவான திருமகள் தானே விரும்பி வந்து உறைவாள். சுபசோபனங்கள் ஏற்படும். மனமகிழ்ச்சியுண்டாகும். சுகம் தரக்கூடிய கன்னிகையுடன் இன்பமாக வாழ்வான். நாடு நகரங்கள் தனதெனக் கைவசமாகும், இந்நிலவுலகில் நன்மை மிகுந்து புகழுடன் வாழ்வான் என போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் வியாழன் மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
No comments:
Post a Comment