Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 236 - வியாழன் மகாதிசை, கேது புத்திப் பலன்கள்


பாரப்பா வியாழதிசை கேது புத்தி
பாழாகும் மாதமது பதினொன்றாகும்
சேரப்பா நாளதுவும் ஆறதாகும்
செம்மையில்லா அதன் பலனை செப்பக்கேளு
வீரப்பா வியாதியது கூடிக்கொல்லும்
விதமில்லா மனைவிதன்னால் நிலைவிட்டுப் போவான்
சாரப்பா சத்துருவும் சதஞ்செய்யவருவான்
சகலதன பாக்கியமும் க்ஷணத்தில்போமே


வியாழ மகாதிசையில் கேது பகவானின் பொசிப்புக் காலம் தீது 11 மாதம் 6 நாள்களாகும். இன்பம் நல்காத அக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் கேட்பாயாக! கொடிய வியாதியினால் மரணமடைதலும், இதமாக நடந்து கொள்ளத் தெரியாத மனைவியினால் மனமுறிந்து பிரிந்து செல்வதும் நேரிடும். பகைவர்களும் பலவிதத்தில் சேதம் விளைவிக்க வந்து சேர்வார்கள், சகல ஜனங்களால் கிடைத்த அனைத்து பாக்கியமும் ஒரு கணத்தில் மறைந்து போம் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் வியாழன் மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment