Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 232 - இராகு மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்


கேளப்பா ராகுதிசை செவ்வாய்புத்தி
கேடான நாளதுவும் வருஷம் ஒன்று
நாளப்பா நாளதுவும் பதினெட்டாகும்
நன்மையில்லா அதன்பலனை நவிலக்கேளு
ஆளப்பா அக்கினியும் சோரபயமுண்டாம்
அடிபணியும் தேவதையால் அவதியுண்டாம்
பாளப்பா பாவையரும் பலனுந்தீதாம்
பாழாகும் பொருள் சிலவும் பலவிதமுந்தானே


இனி, இவ்விராகு திசையில் செவ்வாயின் பொசிப்புக் காலம் கேடுதருவதே. அதுவும் 1 வருடம் 18 நாள்களாகும். இக்கால கட்டத்தில் நன்மை நேராது. அப்பலன்களாவன: அக்கினியாலும், திருடர்களாலும் வெகுபயம் உண்டாகும். குலதெய்வத்தின் சாபத்தால் மிகுந்த அவதி உண்டாகும். பாவையரால் ஏற்படும் பல தீங்குகளால் வெகுதன விரயம் ஏற்படும். பலவகையிலும் பொருட் செலவு உண்டாகும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் இராகு மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment