சேதமில்லா ராகுதிசை புதனார் பத்து |
மேலும் இவ்விராகு திசையில் புதனது புத்தி 2 வருடம் 5 மாதம் 18 நாள்களாகும். அக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுவேன் கேட்பாயாக; பின்னமில்லா வகையில் வாணிபமும் செய்தொழிலும் செழிக்கும். சகோதரர்களுடன் மனமொன்றி வாழ்தலும் நேரும். பிறருடன் சிற்சில மனபோதங்கள் ஏற்படினும் தனலாபமும் பூமி லாபமும் மேலோங்கிப் பெருத்தலோடு புத்திரரால் புகழும் பெருமையும் மிகும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
இப்பாடலில் இராகு மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
No comments:
Post a Comment