Saturday 11 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 226 - இராகு மகாதிசை, சனி புத்திப் பலன்கள்


தானென்ற ராகுதிசை சனிபுத்திகேளு
தன்மையில்லா மாதமது முப்பத்தினாலு
நானென்ற நாளதும் ஆறதாகும்
நலமில்லாப் பிரமை கொண்டு நாடுநகர் திரிவன்
கோனென்ற பிதுர் பீடையுண்டாகும் பாரு
கொடியிடையாள் நோவாகும்குழந்தையது சாவாம்
தேனென்ற தேவதையின் இடஞ்சலுண்டாகும்
தெண்டமுடன் சத்துருவும் திரவியங்கள்சேரும்.


இராகு மகாதிசையில் சனிபுத்தியின் காலம் 2 வருடம் 10 மாதம் 6 நாள்களாகும். இக்காலகட்டத்தில் இச்சாதகன் நன்மை இல்லாதவனாகப் பிரமை பிடித்தவனைப் போல் பலதேசமும் சென்று திரிவான். பூர்வபுண்ய வசத்தால் பிதுர்களினால் பீடை ஏற்படும். கொடிபோலும் இடை யுடைய மனைவிக்கு நோய் உண்டாதலும் குழந்தை மரணமும் உண்டாகும். குலதெய்வத்தால் இடைஞ்சல் ஏற்படும். பலவகையில் விரயங்கள் ஏற்படும். சத்துருக்களின் தொகைமிகுவதே போல வெகு தனலாபமும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் இராகு மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment