காணவேராகு திசை வருஷம் பதினெட்டு |
சிறப்பு மிக்க இராகு மகாதிசையானது 18 ஆண்டுகளாகும். இதில் இராகுவின் பொசிப்புக் காலம் அதாவது சுயபுத்தியானது 2 வருடம் 8 மாதம் 12 நாள்களாகும். இக்காலகட்டத்தில் சத்துருக்களால் தொல்லைகளும் நிபந்தனையோடும் எண்ணமுள்ளவனாய் மனைவி இருப்பது கண்டு மனம் வெதும்புதலும், குடியிருக்கும் மனைபாழாதலும் மூதாதையர் சேர்த்து வைத்த பழைமையான கலைப்பொருள்களும் தம் பொருளும் சேதமாகி விரயம் காட்டும். அதுமட்டுமல்லாமல் பலமான பிணியுண்டாகி உயிர்க்குக் கேடு செய்யும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
இப்பாடலில் இராகு மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
No comments:
Post a Comment