பாரப்பா செவ்வாயில் சூரிய புத்தி |
கீர்த்திமிகு செவ்வாய் திசையில் சூரிய புத்தி 126 நாள்களாகும். அவனது பொசிப்புக் காலத்தில் ஏற்படும் பலன்களாவன: வெகு சம்பத்து ஏற்படும், ஐஸ்வரியம் பெருகும். சத்துருக்கள் உறவாகி அதனால் இன்பம் காணும். எல்லாவகைத் துன்பங்களும் விலகும்; மிகுந்த தன லாபம் நேரும்., பல சிவத்தலங்களுக்குச் சென்று பிரசித்திமிகு பூசைகளை இச்சாதகன் புரிவான். சிவதீட்சை பெறுவான் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
No comments:
Post a Comment