Saturday 11 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 222 - செவ்வாய் மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள்


பாரப்பா செவ்வாயில் சூரிய புத்தி
பாங்கான நாளதுவும் நூற்றிருபத்தியாறு
ஆரப்பா அதன் பலன் அரையக்கேளு
ஆனதொரு சம்பத்து அயிஸ்வரிய முண்டாம்
சாரப்பா சத்துருவு முறவாகிப் போவான்
சஞ்சலங்கள் தானகலும் சம்பத்துண்டாம்
சேரப்பா சில தவங்கள் சேரப்பண்ணும்
தீங்கில்லா சிவவேடம் பூணுவானே.


கீர்த்திமிகு செவ்வாய் திசையில் சூரிய புத்தி 126 நாள்களாகும். அவனது பொசிப்புக் காலத்தில் ஏற்படும் பலன்களாவன: வெகு சம்பத்து ஏற்படும், ஐஸ்வரியம் பெருகும். சத்துருக்கள் உறவாகி அதனால் இன்பம் காணும். எல்லாவகைத் துன்பங்களும் விலகும்; மிகுந்த தன லாபம் நேரும்., பல சிவத்தலங்களுக்குச் சென்று பிரசித்திமிகு பூசைகளை இச்சாதகன் புரிவான். சிவதீட்சை பெறுவான் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment