தானென்ற சேய் திசையில் சுக்கிரபுத்தி |
தன்னிரகற்ற செவ்வாய் திசையில் சுக்கிர புத்தி தன்றன் பொசிப்புக் காலம் 14 மாதமாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன். நன்கு கேட்பாயாக! மாறுபாடற்ற சத்துருக்களால் விலங்கு பூண நேரும்: மீன் போலும் கண்ணுடைய போகஸ்திரீயின் சேர்க்கை நிகழும். இன்பமில்லாத நிலையில் வெகு துன்பங்களே நிகழும். பலவகையிலும் காரியங்கள் கேடுறும். அரசபயம் உண்டாகும். ஆயுதத்தால் கேடுறும் பயம் ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
No comments:
Post a Comment