Saturday 11 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 220 - செவ்வாய் மகாதிசை, கேது புத்திப் பலன்கள்


ஆகுமே செவ்வாயில் கேதுபுத்தி
ஆகாத நாளதுவும் நூத்திருபத்தியேழு
போதவே பலன் தனைப் பூட்டக்கேளு
பூவையரும் புத்திரரும் வியாதியாகும்
யேருமே வியாதியது கொல்லும்
யின்பமுள்ளனவிரோதம் தானுமுண்டாம்
சாருமே சத்துருவும் பிசாசுதானும்
சஞ்சலங்க ளதனாலே கோடிதானே.


மேலும், இச்செவ்வாய் திசையில் கேது பகவானின் பொசிப்புக்காலம் 127 நாள்களாகும். இவை ஆகாதவையே. இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: மனையில் நாகணவாய்ப்புள் போன்ற பூவையர்க்கும், புத்திரர்க்கும் வியாதி உண்டாகிப் பெருத்த துன்பம் நல்கும். அதனால் மரணமும் நேரும். இதுவரை இன்பமுள்ள அனைத்தும் துன்பம் தரும். விரோதம் பெருகும். சத்துருக்களாலும் பிசாசு பயத்தாலும் துன்பங்கள் மிகும் என்று போகரது அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment