Saturday 11 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 219 - செவ்வாய் மகாதிசை, புதன் புத்திப் பலன்கள்


காணவே சேய்திசையில் புதனார்புத்தி
கணக்கான நாளதுவும் மாதம் பதிமூன்று
பூணவே நாளதுவும் மூணொன்பதாகும்
பூட்டான அதன்பலனைப் புகலக்கேளூ
பேணவே ஓமுடிந்து பிரயமும்
பெரிதான நீரிழிவும் பிலன்கேடுபண்ணும்
தோணவே தோகையரும் வியாதியாவாள்
தொடுத்ததொரு காரியங்கள் பொல்லாப்பாமே


இனி, செவ்வாய் திசையில் புகபகவானின் புத்தி 1 வருடம் 1மாதம் 27 நாள்களாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களாவன: பாண்டு முதலிய நோய்களும், நீரிழிவும் தேக பலனை அழித்துக் கேடு செய்யும். வீட்டில் மனையாளும் வியாதிக்கு அடிமைப்பட்டு கேடடைவாள். எடுத்த காரியங்கள் எல்லாம் முற்றும் கேடுற்றுப் பொல்லாததாகவே முடியும் என்று போகர் அருளால் புலிப்பாணி பாடினேன்.

இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment