Saturday 11 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 216 - செவ்வாய் மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்


பகையான சேய்திசை ராகுபுத்தி
பாங்கில்லா நாளதுவும் வருஷம் ஒன்று
துகையில்லா நாளதுவும் பதினெட்டாம்
துன்பங்கள் சுரதோஷம் வாதபீடை
வகையில்லா சத்துருவும் அக்கினியுமுண்டாம்
வளங்கொடியாள் விரோதமது வகையுடனே காட்டும்
நகையுடனே பூஷணங்கள் நலமில்லா சிலவாம்
நன்மையில்லா நிலைவிட்டு நடப்பாள் காணே  


பகை செய்யும் கிரகமான செவ்வாய் கிரகத்தின் திசையில் கரும்பாம்பு என்ற இராகு பகவானின் பொசிப்புக் காலம் 1ட் வருடம் 18 நாள்களாகும்; இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்கள் வெகு துன்பங்களை விளைவிக்கும் . சுரதோடம்; வாதம் முதலிய நோய்களால் பீடை சத்துருக்களினால் ஏற்படும் துன்பம் மற்றும் அக்கினியாகிய நெருப்பினால் துன்பம் நேரும்; மனைவியால் விரோதம் வந்து வகை தொகையான துன்பங்களைக் காட்டும், அணியும் ஆபரணங்களும் அழிந்தொழியும்; நலமில்லா வகையில் மனையாளும் சென்று நன்மையில்லாத நிலையினைவிட்டு நடப்பாள் என்றும் போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment