பகையான சேய்திசை ராகுபுத்தி |
பகை செய்யும் கிரகமான செவ்வாய் கிரகத்தின் திசையில் கரும்பாம்பு என்ற இராகு பகவானின் பொசிப்புக் காலம் 1ட் வருடம் 18 நாள்களாகும்; இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்கள் வெகு துன்பங்களை விளைவிக்கும் . சுரதோடம்; வாதம் முதலிய நோய்களால் பீடை சத்துருக்களினால் ஏற்படும் துன்பம் மற்றும் அக்கினியாகிய நெருப்பினால் துன்பம் நேரும்; மனைவியால் விரோதம் வந்து வகை தொகையான துன்பங்களைக் காட்டும், அணியும் ஆபரணங்களும் அழிந்தொழியும்; நலமில்லா வகையில் மனையாளும் சென்று நன்மையில்லாத நிலையினைவிட்டு நடப்பாள் என்றும் போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
No comments:
Post a Comment