Saturday 11 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 215 - செவ்வாய் மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்




ஆமென்ற சேய்திசை வருஷம் ஏழில்
அங்காரகன் புத்திநாள் நூத்திநாற்பத்திஏழு
போகமென்ற அதன்பகை ஆயுதத்தால்பீடை
தாமென்ற சத்துருவால் வியாதியதுகாணும்
தனச்சேதம் உடல்சேதம் தானே உண்டாம்
நாமென்ற நகரத்தில் சூனியங்களுண்டாம்
நாடேல்லாம் தீதாகும் நன்மையில்லாப் பகையே.


இனி, சேய் என்று அழைக்கப்படும் செவ்வாயின் தசையில் அக்கிரகத்திற்குரிய சுயபுத்தி 147 நாள்கள் ஆகும். இவனது பொசிப்புக் காலத்தில் ஏற்படும் பலன்களாவன: புகழ்மிக்க அரசர் பகை உளவாகும்; ஆயுதத்தாலும் பீடைகள் நேரும். நாகப்பாம்பினைப் போன்ற விடமுடைய சத்துருக்களால் வியாதியும் நேரும்; தன விரயம் ஏற்படும். உடல் சேதமும் உண்டாகும். சூனியம், பில்லி, போன்றவற்றால் துன்பங்கள் நேரும். நாடே தூற்றிப் பகையாகும் என்று போகரது அருளால் புலிப்பாணி பாடினேன்.

இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment