கேளப்பா சந்திரதிசை சுக்கிரபுத்தி |
இன்னும் ஒரு கருத்தைச் சொல்லுகிறேன். கேள்! சந்திர மகாதிசையில் சுக்கிரனது பொசிப்புக் காலம் 1 வருடம் 8 மாதமாகும். அவனது பொசிப்புக் காலத்தில் ஏற்படும் பலன்களைக் கூறுகிறேன் கேள். மகாலட்சுமியானவள் அவனது மனையில் சுகித்துத் தங்கிருப்பாள். வாகன யோகம் உண்டாகும். பொன்னாபரண சேர்க்கையும் முத்தாபரண சேர்க்கையும் இதமான பல்வேறு பூஷணங்களும் இணையற்றதாக இச்சாதகனுக்கு வாய்க்கும் என்று வகை தொகை அறிந்து கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் சந்திர மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
No comments:
Post a Comment