Friday 10 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 207 - சந்திர மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்


தானென்ற சந்திர திசை செவ்வாய்புத்தி
தன்மையில்லா நாளதுவும் மாதம்ஏழு
வானென்ற அதன்பலனைச் சொல்லக்கேளு
வாதமுடன் கிரந்திபித்தம் வாய்வுரோகம்
யேனென்ற கள்ளரால் சோரமுண்டாம்
யெளிதான யேந்திழையால் துக்கமுண்டாம்
கோனென்ற கோதையரும் சகோதரத்தால்
கொடுமைகளு முண்டாகும் கூற்ந்துபாரே


அடுத்து, சந்திர மகாதிசையில் செவ்வாய் புத்தி ஏழு மாதங்களாகும். இவை அசுபபலன் தருபவையே. அவையாவன: வாதநோய், பித்தத்தால் ஏற்படும் வாந்திபேதி, மற்றும் வாயுவால் ஏற்படும் வியாதிகளை உண்டு பண்ணும். வெகுபலவான கள்ளர்களின் கோபத்திற்கு உள்ளாகச் செய்யும். இச்சைக்குகந்த பெண்களால் வெகு துக்கத்தை ஏற்படுத்தலும், வெகு பலமான அப்பெண்களாலும் அவர்களது சகோதரர்களாலும் கொடுமைகள் உண்டு. எனினும் தீர்க்கமாய் ஆராய்ந்து பலன் கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சந்திர மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment