Friday 10 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 206 - சந்திர மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்


சொல்லவே சந்திரதிசை வருஷம் பத்தில்
சுகமுடைய சந்திரபுத்தி மாதம் பத்து
நில்லவே யதனுடைய பலனைச் சொல்வோம்
நிகரில்லா மன்னருடன் மகிழ்ச்சியாகும்
சொல்லவே சுயவரங்கள் நாட்டிவைத்து
சுகமான கல்யாணம் ஆகும்பாரு
வெல்லவே சத்துருவை ஜெயிக்கலாம்
வேணபடி நிதிசேரும் விவரந்தானே.


இனி, சந்திர மகாதிசையில் சந்திர பகவானின் சுயபுத்தி 10, மாதங்களாகும் இவ்னது பொசிப்புக் காலத்தில் ஏற்படும் பலன்களாவன; தன்னிகரில்லா மன்னருடன் மகிழ்வுடன் நட்புக் கொள்ளச் செய்யும். சொல்லுதற்கரிய சுயம்வரங்களை கூட்டி வைத்து கல்யாண வைபோகத்தை நிறைவு செய்து மகிழ்ச்சி கொள்ளச் செய்யும். சத்துருக்களை வென்று வெற்றி வாகை சூடச் செய்யும். வேண்டிய தனலாபங்களையும் பொருட் சேர்க்கையையும் ஏற்படுத்தி மகிழ்வுதரும் என்று போகர் அருளால் புலிபாணி கூறினேன்.

இப்பாடலில் சந்திர மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment