Friday 10 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 204 - சூரிய மகாதிசை, கேது புத்திப் பலன்கள்

ஆமென்ற ரவிதிசையில் கேதுபுத்தி
ஆகாத நாளதுவும் நூத்திருபத்தாறு
போமென்ற அதன்பலனைப் புகலக்கேளு
பொருந்துகின்ற காரியங்கள் சேதமாகும்
நாமென்ற மனைவிதன்னை நாசம் பண்ணும்
நலமில்லா சத்துருவும் நல்குவான்பார்
தாமென்ற இருந்தவிடம் விட்டேகவைக்கும்
தரணிதனில் தெண்டம்வரும் சார்ந்துகேளே


இன்னுமொன்று இந்த இரவியின் திசையில் செம்பாம்பு என்று கூறப்படும் கேதுபகவானின் பொசிப்புக் காலம் மிகவும் பொல்லாத நாள்களேயாகும். அதுவும் 125 நாள்களேயாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: காரியக்கேடு ஏற்படும். மனைவி நாசத்தை ஏற்படுத்தும். கேடு செய்யும் சத்துருக்களிடம் சென்று சரணடையச் செய்யும். இருந்தமனை ஊர்விட்டு ஓடிவிடச் செய்யும். பூமியில் பலவிதமான தெண்டங்களை அடையச் செய்யும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சூரிய மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment