காணவே ரவிதிசையில் செவ்வாய்புத்தி |
மேலும் இச்சூரிய மகாதிசையில் செவ்வாயின் பொசிப்புக் காலம் 126 நாள்களாகும். இக்காலகட்டத்தில் இச்சாதகனுக்கு ஏற்படும் பலன்களாவன: பிறரால் புகழப் பெறும் தோரணை நேரும்; சொல்லுதற்குரிய நல்ல பூமி வாய்த்தலும், தனலாபம் ஏற்படலும், செல்வச் செழிப்பும் கன்று காலிகளும் பொருட் சேர்க்கையும் ஏற்படும். விளைச்சல் பெருகி அதனால் நற்பொருட் சேர்க்கையும் சுபகாரியங்களும் மனையில் நிகழும். நவதானிய விளைவு மிகுதலால் அரச செல்வம் பெற்றவன் என்று பிறர் போற்றும் பெருமையும் புகழும் ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் சூரிய மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
No comments:
Post a Comment