Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 195


போச்சப்பா இன்னமொரு பேச்சுக்கேளூ
புகழ்பெரிய நீசபங்க ராஜயோகம்
நீச்சப்பா நீணிலத்தில் ஜென்மனுக்கு
நிகழ்த்திவிட்டோம் நிலைசமய மறிந்து செப்பு
கூச்சப்பா கொடியோர்கள் கண்னுற்றாலும்
குற்றம் வந்து தீருமடா குழவிக்கேதான்
வீச்சப்பா போகருட கருணையாலே
விலம்பினேன் புலிபாணி வினையைக்கேளே


வேறொன்றையும் கூறுகிறேன். கேட்பாயாக! புகழ்மிக்கதும் பெரியதுமான நீசபங்க ராஜயோகமானது ஒரு சாதகனுக்கு எவ்வாறு என்பதனை கிரகநிலை, சமயம் ஆகியவற்றை நன்கு ஆராய்ந்து அறிந்து கூறுவாயாக! ஏனெனில் தீயகோள்கள் கண்ணுற்றாலும் அச்சாதகனுக்குக் குற்றமே வந்து சேரும் என்பது மிக உறுதியான உண்மையே என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment