Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 189


பாரப்பா பரமகுரு ஆறிலேற
பலமுள்ள மாபெலி சக்கிரவர்த்தி
சீரப்பா சிறைக்கூடம் சென்றாரப்பா
சிவசிவா தேவர்கள் தன்கொடுமையாலே
ஈரப்பா இராஜ பயம்கலகம் துன்பம்
இல்லறத்தில் களவுபோம் கிலேசம் மெத்த
வீரப்பா வெகுபயமாம் சர்ப்பதோஷம்
வேந்தன் நின்ற பதியறிந்து வினையைமுட்டே


பிரசித்திபெற்ற குருபவான் கோட்சாரத்தில் ஆறாம் இடத்தை அடைந்த காரணத்தால் தான் சிவபரம் பொருளின் பேரருளால், தேவர்கள் கொடுமையால் பலம் மிகுந்தவரான மகாபலிச் சக்கரவர்த்தி சிறைக்கூடம் சென்றதனை நினைவினில் கொள்க. அரசபயமும், கலகமும், பலவகைத் துன்பங்களும், இல்லத்தில் களவு போதலும் மனத்தில் குழப்பமும் பயமும் ஏற்படுவதோடு விஷபயமும் உண்டு என்று குரு நின்ற பதியினை அறிந்து அதாவது கிரக நிலவரங்களை ஆராய்ந்து கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment